புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014

இந்தியாவின் தோல்வியால் இலங்கைக்கு முதலிடம் 
ஐ.சி.சி தரப்படுத்தலில் சர்வதேச 20 - 20 போட்டியில் இலங்கை மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 
மு.க.அழகிரிக்கு திமுகவில் மீண்டும் முக்கியப் பதவி? 
திமுகவில் மு.க.அழகிரி மீண்டும் சேர்க்கப்பட்டு அவருக்கு தலைமைக் கழகத்தில் முக்கியப் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் பெண்கள்: பரோக்கள் என்ற பெயரில் சமூகத்தில் உலாவும் நிலை
ராஜஸ்தான் மாநிலங்களில் இளம் பெண்கள், ஆடு, மாடுகளை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் அவலம் நடந்து வருகிறது.
19 சிறுமிகளை கொன்ற காமக்கொடூரனின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை
19 சிறுமிகளை பலாத்காரம் செய்து கொன்ற சுரிந்தர் கோலிக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா தரபபடுதல் வரிசையில் முதலாம் இடம்
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.

விபத்தில் காயமடைந்த ஐ.தே.க எம்பியின் இடது கால் அகற்றப்பட்டுள்ளது
தெற்கு அதிவேக பாதையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெருவின் இடது கால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 செப்., 2014


சென்னையில் 1427 விநாயகர் சிலைகள் கரைப்பு
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 29–ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  சென்னையிலும் வழக்கமான விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.

இயக்குநர் அட்லி - நடிகை பிரியா நிச்சயதார்த்தம்

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் இயக்குனர் ஷங்கருடன் துணை இயக்குனராக பணியாற்றியவர். 

சென்னையில் ராம.கோபாலன் கைது
சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.  திருவல்லிக்கேணியில் பகுதியில் ஊர்வலம் செல்ல இந்து முன்னணி அமைப்பிற்கு காவல்துறை
மாவை எம்.பி.க்கு அமைச்சர் டளஸ் ஆலோசனை 
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக நியமனம் பெற்ற  நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் ஆளும் கட்சி அமைச்சர் டளஸ் அழகப் பெரும தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்
பேராளர் மாநாடு ஆரம்பம் 
இலங்கை தமிழரசுக்கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டின் 3ஆவது நாள் பேராளர் மாநாடு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.சுமந்திரனால் வாசிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் 15 தீர்மானங்கள் 

வவுனியாவில் இடம்பெறும் இலங்கை தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டில் வெளியிடப்படவிருந்த 15 தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

ஐ.நாவின் புதிய ஆணையாளருடன் பேசத் தயார்! இலங்கைக்கு வருமாறு மகிந்த அழைப்பு
ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அவரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்களை அணிதிரட்டி சாத்வீக வழிகளில் போராட தமிழரசுக் கட்சி தீர்மானம்: மாவை எம்.பி
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் 3வது நாள் அமர்வுகள் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது.

ஷியா பிரிவு தலைவர் அல்லமா அலி அக்பர் குமெய்லி சுட்டுக்கொலை

பாகிஸ்தான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் ஷியா மற்றும் சன்னி பிரிவினருக்கு இடையே தீராத நெடும்பகை இருந்து வருகிறது. ஷியா பிரிவினர்

நித்யானந்தாவுக்கு நாளை பெங்களூரில் ஆண்மை பரிசோதனை 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நித்யானந்தா சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை பெங்களூரில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சி.ஐ.டி. போலீசார் செய்துள்ளனர்.
டித்துச் சென்றவர்களிடமே விசாரணை வேண்டுமா? 
சட்டமில்லாத நாட்டிலே சட்டத்தரணியாக இருப்பதற்கு நான் வெட்கப்படுகின்றேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
போக்குவரத்து பாதிப்பு; பயணிகள் நிர்க்கதியில் 
கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கான பேரூந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து போக்குவரத்துச் செய்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
 எங்களுக்கு யாரும் தடை போட முடியாது; என்கிறார் அனந்தி 
கணவன் இருக்கும் போதே வீட்டிற்குள் அத்துமீறி இராணுவம் நுழையும் இன்றைய நிலையில் கணவன் இல்லாத வீடுகளில் எவ்வாறு நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்? என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ரணில், கரு, சஜித் ஒரே மேடையில் - ஐ.தே.கட்சியின் மறு ஐக்கியம்
பதுளை மாவட்டம் பசறையில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 68வது மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டார்.

சர்வதேச விசாரணைக்கு இலங்கை அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்: மனித உரிமைகள் ஆணையாளர்
இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தன், மனோ, அசாத் சாலி ஆகியோர் புதிய கூட்டணியில்
சிறுபான்மை இனங்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி ஆகியன இணைந்து கூட்டணி ஒன்றை ஏற்படுத்த தீர்மானித்துள்ளன.

முல்லைத்தீவில் இராணுவத்திடமிருந்து காணியை மீட்க போராடியவர் திடீர் மரணம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில்  படையினர் நிலை கொண்டிருக்கும் தன்னுடைய காணியை தன்னிடமே வழங்குமாறு கோரி வந்த உரிமையாளர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
லிபியாவில் கைப்பற்றிய 11 விமானங்களை கொண்டு அமெரிக்க மீது தாக்க திட்டமா ? அமெரிக்க அதிர்ச்சி 
செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்கர்களுக்கு ஒரு கறுப்பு தினம். கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திததி தீவிரவாதிகளால் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் விமானம் மூலம்
அமெரிக்கன் பகிரங்க சுற்றுப் போட்டிகளில் அரை இறுதி ஆடங்களில் பெரிய தலைகள் வீழ்ச்சி 
அரை இறுதி ஆட்டங்களில் முதல்தர ஆட்டக்காரர் ட்ஜோகொவிச் ஜாப்பானிய வீரர் நிஷிகொரியிடமும் மூன்றாம் தர வீரர் பெடரர் குரோசியா வீரர் சிலிசிடமும்  தோல்வி கண்டு  வெளியேறினார்கள் .இறுதியாட்டத்தில் பெரிதும் அறிந்திராத புதிய வீரர்களான செலிசும் நிசிகொரியும் மோதுகிறார்கள் . மகளிர் போட்டியில் இறுதி ஆட்டத்தில் செர்னா வில்லியம்சும் வோச்நியாக்கியும் மோதுகிறார்கள்
மகளிர் இரட்டையர் ஆட்ட இறுதியாட்டத்தில் ஹிங்கிஸ்/ பெனிட்டா  ஜோடி மகரோவ/ வேச்ணினா ஜோடியிடம் தோல்வி கண்டது 

ஆலையடி வேம்பு உதயம் வி.க உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி விநாயகபுரம் மின்னொளி சம்பியன்

ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக்கழகம் நடத்திய 20 வயதுக்குட்பட்ட 7 பேர் கொண்ட காற்பந்தாட்டப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி அணி சம்பியனானது.

சென்.மேரிசை வீழ்த்தி சம்பியனானது பாடும்மீன்

டார்வினின் அதிரடியான கோல்களின் மூலம் சென்.மேரிஸ் அணியைத் தோற்கடித்து சம்பியனாகியது பாடும் மீன் அணி.

உலகில் சுகாதாரமாக வாழக்கூடிய 10 நகரங்கள் 
மனிதர்களாகிய எமது சுகாதாரம் நாம் எப்படி வாழ்கின்றோம் என்பதில் மட்டும் தங்கியிருப்பதில்லை. நாம் எங்கு வாழ்கின்றோம் என்பதிலும் கூடத் தங்கியுள்ளது.


இறுதியில் எங்கள் வழிக்கே வந்திருக்கிறது கூட்டமைப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தமிழ்க் கூட்டமைப்புக்கு இப்போதைதுதான் ஞானம் பிறந்திருக்கிறது. நாங்கள் நீண்டகாலமாகச் சொல்லி வந்தவற்றை இப்போதுதான் சொல்கிறார். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இதன்மூலம்

வெற்றுக் கோ'சங்களாலும் கற்பனாவாதத்தாலும் இழந்தவை பல

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு ஒன்றை எட்டுவதையே நாம் விரும்புகிறோம்

விட்டுக் கொடுப்புடன் செயற்படுவோம் என்கிறார் சம்பந்தன்
கடந்த காலத்தில் இனப்பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு காணக்


தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதியமைச் சராக பதவியேற்ற பிரபா கணேசன் தனது அமைச்சில் கடமை களைப் பொறுப்பேற்ற வேளை அவருக்கு இந்து வித்தியாகுரு பிரம்மஸ்ரீ பாபு சர்மா இராமச்சந்திரக் குருக்கள் பொன்னாடை போர்த்தி, தலைப்பாகை சூடி ஆசீர்வதித்தார். அமைச்சர் ரஞ்சித் சியம்ப லாபிட்டி, பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எச்.விக்கிரம சிங்கவும் அருகே காணப்படுகின்றனர்.

செங்கோட்டை: கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி: சாலை மறியலால் பதற்றம்: போக்குவரத்து பாதிப்பு

நெல்லை மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பழைய கட்டிடம் ஒன்று நகராட்சி அலுவலத்திற்கு அருகே உள்ளது.

அரியலூர் அருகே கணவன், மனைவி, குழந்தை படுகொலை: நரபலிக்காகவா என சந்தேகம்?

அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த சேந்தமங்கலத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரும், அவரது மனைவியும்
கூட்டமைப்பை சந்திக்கிறார் யசூசி அகாசி 
 24 ஆவது முறையாக இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்டுள்ள ஜப்பான் தூதுவர் யசூசி அகாசி இன்று இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.
திருச்சியில் இலங்கையர் கொலை : நால்வர் கைது 
தமிழகத்தின் திருச்சியில் இடம்பெற்ற இலங்கையர் கொலை வழக்கில் தனிப்படை பொலிசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
நெய்மருக்கு கிடைந்த அரிய வாய்ப்பு 
வரலாற்றிலேயே குறைந்த வயதுள்ள அணித்தலைவராக பிரேசில் கால்பந்து அணியில் நட்சத்திர வீரர் நெய்மர் பொறுப்பேற்றுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையை ஒடுக்க நேட்டோ நாடுகள் உடன்பாடு 
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையின் நிதி ஆதாரங்களை முடக்கவும், அவர்களது செயல்பாடுகளை ஒடுக்கவும் நேட்டோ நாடுகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

6 செப்., 2014

வெள்ளத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 100–ஐ தாண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர் கன மழையால் கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிடுகிறார்.

இறுதி யுத்தத்தில் ஐ.நா. தவறிழைப்பு உயிரிழப்பை தடுக்க முன்வரவில்லை - ரொய்ட்டர்

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் பொதுமக்களை பாதுகாக்க தவறியதன் மூலமாக ஐ.நா. தனக்கு வழங்கப்பட்ட

தமிழீழம் அமைக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைகின்றது : கோத்தபாய ராஜபக்ச கடும் சீற்றம்

தமிழீழம் அமைக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைகின்றது : கோத்தபாய ராஜபக்ச கடும் சீற்றம்
இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தனிநாடொன்றினை அமைப்பதற்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைவாக தனது சீற்றத்தினை வெளிப்படுத்தியுள்ள சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, இந்த நோக்கத்தினை அடைவதற்கு வெளிநாடுகளின் ஆதரவினை திரட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

இபோலா நோய்ப் பரவியதால் அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியர்ரா லியோன், கிருமிப் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக குறைந்தது மூன்று நாட்களுக்கு மக்களை (BBC)வீடுகளை வெளியில் வர விடாமல் தடுப்பது என அறிவித்துள்ளனர்.
சியர்ரா லியோனில் இபோலா எச்சரிக்கை விளம்பரம்
சியர்ரா லியோனில் இபோலா எச்சரிக்கை விளம்பரம்
செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில் மக்கள் தத்தமது வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று சனிக்கிழமை புதிய நிர்வாகிகள் தெரிவு இடம்பெற்றது. 
இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, செயலாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம், பொருளாளராக அன்ரனி

வெள்ளி நகைகள் எங்கே?

‘‘இந்த வழக்கின் எதிர் மனுதாரரான ஜெயலலிதாவின் அசையும் சொத்துகள் அனைத்தும் இந்தநீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அதைப் பார்த்து தீர்ப்பு வழங்குவதுதான் முறையாக இருக்கும்’’ என்று டிசம்பர் 12 ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொன்னார். அதனை அடுத்து மீண்டும் வழக்கு டிசம்பர் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, ‘‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் சென்னையில் இருந்து பெங்களூரு கொண்டுவந்துவிட்டோம். அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. இனி வழக்கின் இறுதிக்கட்ட வாதத்தைத் தொடரலாமா?’’ என அரசு வழக்கறிஞர் பவானிசிங்கைப் பார்த்துக் கேட்டார்.

பெங்களூர்  பயமா ஜுரமா 
'ஒரு மன்னர், யானை மீது அமர்ந்தபடி நாட்டைச் சுற்றி வலம் வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். குறிப்பிட்ட ஒரு கிராமத்துக்கு மன்னர் ஒவ்வொரு முறை போகும்போதும், ஓர் இளைஞன் யானையின் வாலைப் பிடித்து இழுப்பதும், யானை மேற்கொண்டு நடக்க முடியாமல்

                    கண்ணீர் அஞ்சலி 
                                தில்லையம்பலம் பாலசிங்கம்
                                             (இளைப்பாறிய கிராமசேவகர் )
கனடாவில் வசித்து வந்த பாலசினகம் விதானையார் காலமாகி விட்டார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கின்றேன் . திரு பாலசிங்கம்  

புதிய ஐ.நா ஆணையாளரின் கீழ் விசாரணையை நீர்த்துப் போகச் செய்ய முடியும் சிறீலங்கா நம்பிக்கை!

புதிய மனித உரிமைகள் ஆணையாளரின் கீழ் தங்களுக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைகளை நீர்த்துப் போக செய்துவிடலாம் என்ற

ஈகைப்பேரொளி செந்தில் குமரனின் முதலாம் ஆண்டு நினைவில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைக்புக் குழுவின் அறிக்கை!

தமிழீழ மக்களின் துயர்கண்டு தாங்காது அவர்களின் சுதந்திரவாழ்விற்காகவும், தாயக விடுதலைக்காகவும்
நாளை  சுவிஸ் போய்ஸ் சுற்றுப்போட்டி 
நாளை சுவிஸ் பேர்ன் (07.09.2014 ) சுவிச்போய்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்தும் வெளியரங்க உதைபந்தாட்டச் சுற்றுபோட்டி நடைபெறவுள்ளது  முன்சென்புச்சே இல் உள்ள பாடசாலை மைதானத்தில் இந்த போட்டிகள் கஜலை 08.30 க்கு ஆரமபமாக்வுள்ளன .போட்டிகளில் 17 கழகங்கள் பங்குபற்றுகின்றன.இந்த சுற்றுக் கிண்ணத்தை கைப்பற்றுவதில் லீஸ் யங்ஸ்டார்  பேர்ன் ராயல் லௌசான்னெ ப்ளூபெர்ட்ஸ் இளம்சிறுத் தைகள் மற்றும் ஆறுமாத தடையின் பèஇன்னார் மீண்டும் களமாட உள்ள லுசர்ன் யங் பேர்ட்ஸ் ஆகிய கழககங்களில் ஒன்று கைப்பற்றலாம் என எதிர்பர்க்கப்படுகிறது கடந்த வருடம் இந்த கிண்ணத்துக்கான சுற்றுப்போட்டிகளில் 1 ஆம் 3 ஆம் இடங்களை  லீஸ் யங் ஸ்டார் கைப்பற்றி  இருந்தது குறிப்பிடத்தக்கது 

kv_thavarasa











இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைக்கான தலைவராக புங்குடுதீவை 8ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்ட சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைக்கான புதிய நிர்வாகிகள் தெரிவுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதன்போது, தலைவராக சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதுடன், உப தலைவர்களாக சிரேஸ்ட சட்டத்தரணி மு.இராஜகுலேந்திராவும், ஏ.தேவராஜாவும் தெரிவாகியதுடன்,
பொதுச் செயலாளராக ஊ.இரத்தினவடிவேலுவும், பொருளாளராக சிவலோகநாதனும் தெரிவு செய்யப்பட்டதுடன், மேலும் 10 நிர்வாகக்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்
அமெரிக்காவை கலக்கினார் நெய்மர் 
news
அமெரிக்காவில் நடைபெற்ற நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரேசில் அணி, கொலம்பியாவை எதிர்கொண்டது. உலகக் கோப்பை காலிறுதி போட்டிக்குப் பின்னர் முதன்முறையாக இரு அணிகளும் மோதின. 
மனித உரிமைக் கூட்டத் தொடர் திங்கள் ஆரம்பம்- கலக்கத்தில் இலங்கை 
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
 
ரிசிக்கு வாக்கு ; ஊவா தேர்தல் மோசடி அம்பலம் 
வாக்காளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் உழவு இயந்திரம் என்பன அப்புத்தளை பொலிஸ்
தேரேறி வருகிறாள் தெல்லிப்பழை துர்க்கையம்மன் 
வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று காலை 7.30 மணியளவில் வசந்த மண்டப பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியுள்ளது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் தலைமையில் 130 தமிழ் அமைப்பு பிரதிநிதிகள் ஆலோசனை

இன்றைய தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கியிருக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மனித
ஐ.நா. சபையில் ராஜபக்சே பேசுவதைக் கண்டித்து செப்டெம்பர் 9 ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : வைகோ

ம.தி.மு.க. தலைவர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில் :
மனித குல வரலாற்றில் மன்னிக்க முடியாத இனப்படுகொலையை

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மனிதநேயம் மிக்க, வரலாறு படைக்கும் தீர்ப்பு: கி.வீரமணி அறிக்கை
தண்டனை காலத்தில் பாதிக்குமேல் அனுபவித்த விசாரணை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள

ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்கச் செல்ல காரணமாக இருந்தது சேர்ந்த தலைவர் மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினர்.கூட்டத்துக்கான ஏற்பாடுகளுக்கு சிவராசன் ஐந்து லட்ச ரூபாயை லலித் சந்திரசேகருக்கு கொடுத்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி
''ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் பெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த

அரசியல் இல்லாத ஆயுதம்தான் புலிகளை அழித்தது! 25 ஆண்டுகள் கழித்து வரதராஜ பெருமாள்!
வரதராஜ பெருமாள், ஈழ அரசியல் அறிந்தவர்களுக்கு மறக்க முடியாத பெயர். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் காந்தி அமுல்படுத்திய நேரத்தில் வட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டவர்.
வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் போது தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் -முதல்வர் 
முதல்வருக்கு அதிகாரங்கள் இல்லை!- இராணுவ பேச்சாளர்
வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் போது தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள கருத்தை இராணுவம் நிராகரித்துள்ளது.

தடை விதிப்பதால் அப்பாவி தமிழர்கள்கூட வரமுடியவில்லை!- புலிகள் தடை தீர்ப்பாயத்தில் விசாரணை தொடக்கம்
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. 2013-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இரண்டு

தமிழரசுக் கட்சியின் 15 வாத்து மாநாடு வவுனியாவில் ஆரம்பம் 
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியது.
கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கா

இலங்கைத் தமிழரசுக் கட்சி- வடக்குக்கு தலைவர்(மாவை ) ,கிழக்குக்கு செயலதிபர் (துரைராஜசிங்கம் )
வவுனியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்சியின் சம்மேளனக் கூட்டத்துக்கு முன்னதான புதிய மத்திய அமைப்புக் கூட்டத்தில் இதற்கான பிரேரணை முன்மொழிய,

5 செப்., 2014


பணத்தாசை காட்டி நடிகைகளை விபசாரத்தில் தள்ளும் கும்பல்: அதிர்ச்சியில் திரை உலகம்!

உதவுவதற்காக தனக்கு பணம் தேவைப்பட்டது. விபசாžரத்தில் ஈடுபட்டால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி தன்னை விபச்சாரத்தில் தள்ளிவிட்டனர்

ad

ad