புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2014


அரியலூர் அருகே கணவன், மனைவி, குழந்தை படுகொலை: நரபலிக்காகவா என சந்தேகம்?

அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த சேந்தமங்கலத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரும், அவரது மனைவியும் வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர். இவர்களது குழந்தை படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

கணவன் மனைவி இருவரும் கோடாளியால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உடல்களின் அருகில் தாயத்து, துண்டிக்கப்பட்ட கோழி, சாமி விக்கிரகங்கள் இருந்ததால், இந்த கொலை சம்பவம் நரபலிக்காக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மறியல் செய்தவர்களை விரட்டி அடித்தனர். இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையும் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ad

ad