புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2014


சர்வதேச விசாரணைக்கு இலங்கை அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்: மனித உரிமைகள் ஆணையாளர்
இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் அதிகாரிகள் அதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 27வது அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் அவருக்கு ஆணையாளர் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளன.
இந்தநிலையிலேயே ஆணையாளர் செய்ட்டின் ஆரம்ப அறிக்கை வெளியாகியுள்ளது.
இலங்கையில் மனித உரிமை காப்பாளர்கள் மற்றும் சாட்சிகளுக்கு எதிராக பயமுறுத்தல்கள் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து செய்ட் தமது கவலையை வெளியிட்டுள்ளார்.
தமது முதல் அறிக்கையில் இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைகள் குறித்து ஆணையாளர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை புதிய ஆணையாளர், நவநீதம்பிள்ளையை போலல்லாது இலங்கையுடன் உரிய புரிந்துணர்வுடன் நடந்து கொள்வார் என்று இலங்கை அரசாங்கம் முன்னதாக நம்பிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad