யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் மதனராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டு ஒளிவிளக்கு ஒளியிழந்த நாள்............என் வாழ்க்கை இருளில் மூழ்கிய நாள் ஆண்டொன்றென்ன ஆயிரம் நாள் தான் போனாலென்ன உம் நினைவு எம்மை விட்டகலாது!
மதரா நீங்கள் எங்கு சென்றீர்கள்? கட்டியவள் துணையின்றி தவிக்க பிள்ளைகளோ பாசத்தால் தவிக்க சென்ற இடம் தான் எங்கே?
மதரா, நீங்கள் வாழ்ந்த இடங்களையும் நடந்த சாலைகளையும் நினைக்கையில் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கண்கள் குளமாகின்றன நதிகளும் தோற்கின்றன கண்ணீரின் வரவைக்கண்டு மதரா நீங்கள் இறக்கவில்லை.
உங்கள் நினைவால் நாம் தான் தினம் தினம் இறக்கின்றோம் இறந்து கொண்டே இருக்கின்றோம்!
நீங்கள் இல்லாமல் வாழும் வாழ்வு ஒரு வாழ்வா? இது ஒரு வாழ்க்கை தானா? மதரா எங்களைவிட்டு பிரிந்திட்டாயோ என்று நினைத்திட எங்கள் உள்ளம் ஏற்க மறுக்கிறது மனமும் தவிக்கிறது
நீங்காத உம் நினைவுகளும் இருந்து வாழ்ந்த காலங்களும் சிறகடித்துப் பறந்ததுவே! உங்கள் சிரித்த முகமும் சீரான பேச்சும் எப்போது காண்போம்?
மதரா! விழிகள் எப்போதும் தேடுகின்றனவே என்று காண்போமென!! என் மனமும் ஏங்குகிறதே!!! இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோர்க்கும் நாணயமாய் நடந்தீர்!
நல்லவராய் வாழ்ந்து நல்லவராகவே எங்களைத் தவிக்கவிட்டுச் சென்றதேனோ? உங்கள் திருமுகம் எப்போது காண்போம் கதறுகிறோம் துடிக்கின்றோம் உங்கள் நினைவு நிழலாக என்றும் தொடரும்...
அன்பு மனைவி கேமா
அப்பா......அப்பா எங்கள் வாழ்வில் எத்தனை உறவுகள் வந்தாலும் உங்ளுக்கு நிகர் யாரும் இல்லை! அப்பா என்றழைக்க இவ்வுலகில் எங்களுக்கு யாரும் இல்லையே!! எங்களைத் தவிக்க விட்டு திடீரென எங்கே சென்றீர்கள்?
அப்பா நாங்கள் கதறுவது காதில் கேட்கவில்லையா நீங்கள் விட்டுப் போன வெற்றிடத்தை எதையிட்டு நிரப்புவோம் காலமெல்லாம் நீங்கள் எம்முடன் இருப்பீர்கள் என நம்பியிருந்தோம் எல்லாம் ஒரு நொடியில் கலைந்து விட்டதே!!
எங்கு பார்த்தாலும் உங்கள் முகம் தான் தெரிகிறது உங்கள் பிரிவால் துடிக்கிறோம் அப்பா நித்தமும் உங்களைத் தேடுகிறோம் நீங்கள் இல்லாத பூமியில் நிம்மதி தான் எமக்கேது! எங்கள் மூவரையும் உள்ளங்கையில் வைத்துத் தாங்கினீர்கள்!
கேட்டதெல்லாம் வாங்கித் தந்து சந்தோஷமும் அடைந்தீர்கள்! அப்பா எங்களுக்கு நீங்கள் எந்தக் குறையும் வைக்கவில்லையே!
பாசமுள்ள அப்பாவே கடைசிவரை எங்களுக்காய் ஓடி ஓடி உழைத்தீர்களே! இளைப்பாறுதல் தர இறைவன் உங்களை அழைத்து விட்டாரோ?
உங்கள் நினைவுகள் எங்கள் கண்களை குளமாக்குகின்றன! அப்பா நாங்கள் மூவரும் கதறுகிறோம் கடைசிவரை கண்மணிபோல் பார்த்துவிட்டு ஒருவார்த்தை கூடச்சொல்லாமல் எங்களைவிட்டுச் சென்றுவிட்டீர்களே?
எங்களைப் பிரிய மனமும் வந்ததோ! உங்கள் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம். உங்கள் பிரிவால் துயருறும் அன்பு பிள்ளைகள் சம்ஜா, விதுஷா, மதுஷா
எமது குடும்பத்தின் சிகரமாயிருந்த அன்புக் கணவர், தந்தை அவர்களின் துயரச்செய்தி கேட்டு எமது இல்லத்திற்கு வந்தும், மரணச்சடங்கில் கலந்துகொண்டும், தொலைபேசியில் எமது துயரைப் பகிர்ந்துகொண்டு ஆறுதல் அளித்தும், தமது சொந்த வேலைகளைக் கருத்தில் கொள்ளாமல் சகல உதவிகளையும் புரிந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும், இன்று வரை எங்களை கரிசனையோடு விசாரித்து வரும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எங்களது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். |