புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2015

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை ராஜபக்~ ஆட்சிகால சந்தேக நபர்களை உடன் கைது செய்யவும்


ந~;டஈடு தேவையில்லை தண்டனையே வழங்க வேண்டும்
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி கோரிக்கை

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 27பேர் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் மோதல்கள் தொடர்பாக ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்ட நபர்களை கைது செய்யுமாறு வெலிக்கடை சிறைக்கைதிகள் படுகொலைக்கு எதிரான மக்கள் அமைப்பு நேற்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
முன்வைத்தார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் பல அமைச்சர்கள் முறைப்படி அனுமதி இன்றி பல்வேறு கொள்வனவுகளில் ஈடுபட்டுள்ளனர். விமான டிக்கட் கொள்வனவு, சதொசவுக்கான பொருள் கொள்வனவு உள்ளிட்ட பல இதில் உள்ளடங்குகின்றன.
இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் புலன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தாம் உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக மஹிந்த அரசிலிருந்து வெளியேறிய முதலாவது தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினராக தான் காணப்பட்டதாகவும், நாட்டில் நல்லாட்சியை உறுதிப்படுத்தவே ஐ.தே.கவுடன் இணைந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாகவிருந்த சிலர் நல்லாட்சி அரசாங்கத்திலும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்று நல்லாட்சியைப் பலவீனப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக மக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. முல்லைத்தீவு மாவட் டத்திலிருந்து எமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
வன்னிப் பகுதியைச் சேர்ந்த அரசியல் வாதியொருவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் சமுர்த்தி திவிநெகும கொடுப்பனவுகளுக்கான பயனாளிகள் தெரிவில் ஆதிக்கம் செலுத் தியுள்ளார். பிரதேச செயலாளர் தெரிவுசெய்த பட்டியலைவிடுத்து குறித்த அரசியல்வாதி யால் தயாரிக்கப்பட்ட கட்சி உறுப்பினர்க ளைக் கொண்ட பட்டியலுக்கு அமையவே கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதேபோல, தையல் இயந்திரங்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்விலும் தமது கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்களுக்கே உதவிகள் வழங்கப்படுகின்றன. இது தொடர்பாக மறிச்சுக்கட்டி, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, துணுக்காய் உள்ளிட்ட இடங்களிலிருந்து மக்கள் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எனவே பிரதேச செயலா ளராலேயே பயனாளிகள் தெரிவுசெய்யப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையா ளரிடமும், முல்லைத்தீவு மாவட்ட செயலா ளரிடமும் நான் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இவ்வாறான நிலையில், கடந்த அரசாங்கத்தில் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீண்டும் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எமது கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிடமும் கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad