புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2015

சிகிச்சை பெறும் எம்.எஸ்.விக்கு சாப்பாடு ஊட்டிவிட்ட இளையராஜா!




பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்தார். இந்த நிலையில் ‘திடீர்’ மூச்சுத்திணறல் காரணமாக அவர் சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. 

எம்.எஸ்.விஸ்வநாதன் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இசையமைப்பாளர் இளையராஜா நேற்று நேரில் பார்த்து, உடல்நலம் விசாரித்தார். டாக்டர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனிடம், ‘திட உணவு சாப்பிடலாம்’ என்று கூறியிருந்தார்கள். ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதன் திட உணவு எதுவும் சாப்பிடவில்லை. 

அவரிடம், ‘‘என் வீட்டில் இருந்து உங்களுக்கு சாப்பாடு கொண்டு வரட்டுமா? அதை சாப்பிடுகிறீர்களா?’’ என்று இளையராஜா கேட்டார். அதற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் சம்மதித்தார். 

உடனடியாக இளையராஜா தன் வீட்டில் இருந்து சாப்பாடு வரவழைத்து, அதை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஊட்டிவிட்டார். அதன்பிறகு இளையராஜா அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். 

இருவரும் 1 மணி நேரத்துக்கு மேல் பேசிக்கொண்டு இருந்ததாகவும், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆஸ்பத்திரியில் இருந்து இன்று  வீடு திரும்புவார் என்றும் அவருடைய மகன் எம்.எஸ்.வி.கோபி தெரிவித்துள்ளார்.

ad

ad