புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2015

விஷாலை மனதில் வைத்து இளம் நடிகர்களுக்கு நடிகை ராதிகா அறிவுரை!

ல்லாக்க படுத்து கொண்டு எச்சில் துப்பினால் அது நம் மீதுதான் விழும் என்பதை இளைய தலைமுறை நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென நடிகை ராதிகா பங்கேற்ற சினிமா விழாவில் பேசினார்.
நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்து, ஹன்சிகா நடித்துள்ள  ‘உயிரே உயிரே
’ படத்தின் பாடல் மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ராதிகா பேசுகையில், இங்கு வந்துள்ள எல்லோரும் பல ஆண்டுகளாக பழகியிருக்கிறோம்.

எங்களுக்குள் எப்போதும் எந்த விதமான பிரச்னையும் வந்ததில்லை. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சந்தோஷமாக பங்கேற்கிறோம். கீழே படுத்துக் கொண்டு மேலே எச்சில் துப்பினால், அது நம் மீதுதான் விழும் என்பதை இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் '' என்றார். 

நடிகர் சங்க கட்டட விவகாரமும், நடிகர் சங்க தேர்தல பிரச்னையும் தீவிரமடைந்துள்ள நிலையில் நடிகை ராதிகா இதுபோல பொடி வைத்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக  சரத்குமாருடன் மல்லுக்கு நிற்கும் விஷாலை மனதில் வைத்துத்தான் ராதிகா இப்படி பேசியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ad

ad