புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2015

ஓரினச்சேர்க்கையால் \'எயிட்ஸ்\' நோய் அதிகரிப்பு


ஓரினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கைகள், இலங்கையில் எச்.ஐ.வி எயிட்ஸ் நோய் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளதென விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதானபதிரண தெரிவித்தார்.
 
இளைஞர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகாதார மற்றும் நலனிருப்பு தொடர்பில் இளைஞர்களை தெளிவூட்டும் நடவடிக்கையொன்று, கொழும்பில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும் அவர் உரையாற்றுகையில்,
 
'பாதுகாப்பற்ற பாலியல் தொடர்புகளே எச்.ஐ.வி வைரஸ் தொற்றுக்கு அதிகளவில் காரணமாக அமைகின்றன. 
 
அத்துடன்இ அதிக வயதுடைய பெண்கள், இளைஞர்களை ஆட்கொண்டு பாலியல் உறவுகளில் ஈடுபடுவதும் இந்நிலைமை அதிகரிப்பதற்கு காரணமாகின்றது' என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் தன்னுடைய கணவன் அல்லது மனைவியைத் தவிர்ந்த ஏனையோருடன் பாலியல் தொடர்புகளைப் பேணுவதாலும் எயிட்ஸ் நோய் அதிகளவில் பரவுவதாக அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

ad

ad