புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசன ஒதுக்கீடு மட்டக்களப்பு, வன்னி பிராந்தியம் குறித்து இன்னும் முடிவில்லை, யாழ் அம்பாறை மாவட்டங்கள் பற்றி தீர்மானங்கள் எடுக்கப்பட்டுவிட்டன.. சுரேஸ்

:-:
யாழ்ப்பாணம், திருகோணமலை, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான ஆ
சன ஒதுக்கீடுகள் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. மட்டக்களப்பு, வன்னி தேர்தல் மாவட்டங்கள் தொடர்பான முடிவுகள் இன்னும் எடுக்கப்பட வேண்டியுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கூட்டமைப்பின் ஒவ்வொரு கட்சிக்கும் வேட்பாளர் பட்டியலில் ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீடகள் குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
அது குறித்து அடுத்த சில நாட்களில் கூட்டமைப்பு முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இம்முறை யாழ்ப்பாணத்திலிருந்து போட்டியிடவுள்ளார். கடந்த நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப் படுத்திய ஏ.விநாயகமூர்த்தி, உடல்நிலை காரணமாகப் இம்முறை போட்டியிடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad