புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூன், 2015

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 74.4 சதவீத வாக்குகள் பதிவு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது. 5 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்றவர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. 74.4 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பெண் வாக்காளர்கள் 74.8 சதவீதமும், ஆண் வாக்காளர்கள் 74 சதவீதமும் வாக்களித்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 30ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 

அதிமுக சார்பில் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.மகேந்திரன் உள்பட 28 பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

ad

ad