ஜெர்மனியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 21 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜெர்மனியின் ஸ்டுட்காட் பிரதான நகருக்கு அருகில் உள்ள மாக்குரோய்னிகன் என்ற நகரில் வசித்து வந்த அலெக்சாண்டர் பீரிஸ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் அதிகாலை 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் நகருக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது பென்ஸ் கார் ஒன்றில் மோதுண்டு உயிரிழந்தார்.