புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2013

அமைச்சரவை கூட்டத்தில் 8 முதலமைச்சர்கள் பங்கேற்பு:

வட மாகாண முதல்வர் வரவில்லை
ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
கூறினார். மாத இறுதியில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் சகல மாகாண முதலமைச்சர்களுக்கும் பங்கேற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கமைய நேற்று 8 மாகாணங்களின் முதலமைச்சர்கள் பங்குகொண்டனர். அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர்கள் அழைக்கப் பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.
முதலமைச்சராக சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவான பின் மாகாண முதலமைச்சர்கள் பங்கேற்கும் முதலாவது கூட்டம் நேற்று நடைபெற்றது. வட பகுதிக்கு சென்ற அமெ ரிக்க தூதுவரை வடமாகாண முதலமைச்சர் நேற்று முன்தினம் சந்தித்தார். அதன் பின் சுகவீனமுற்ற அவர் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக அறிய வருகிறது.

ad

ad