புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2013

காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய காதலன் தற்கொலை.

இரத்தினபுரி - இரக்குவானை பகுதியில் காதலன் காதலி இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக காதலன் காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இரக்குவானை - தெனியாய வீதியில் உள்ள 17 வயதுடைய காதலியின் வீட்டுக்கு தெரணியகல - மீயனவிட்ட பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய காதலன் சென்றுள்ளார். இதன்போது இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
 
இதன்போது படுகாயமடைந்த குறித்தப் பெண் காவத்தை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் இரக்குவானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 

ad

ad