புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2013

லண்டனில் மாபெரும் பேரணிக்கு தயாராகும் பிரித்தானிய தமிழர்கள்
இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு பிரிட்டனின் பிரதமர் செல்வதைக் கண்டித்து லண்டனில் மாபெரும் பேரணி ஒன்றை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
நாளை மாலை 4 மணிக்கு Embankment நிலக்கீழ் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பித்து 10, Downing Street முன்பாக இப்பேரணி நிறைவடையும்.
பிரித்தானிய பிரதமரின் இலங்கை பயணத்தை நிறுத்த வேண்டும், பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோஷங்க‌ளை மையப்படுத்தி ஒரு மாபெரும் பேரணிக்கான அழைப்பை பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ளது.
இப்பேரணிக்கு மக்கள் அனைவரும் தமது முழுமையான பங்களிப்பினைச் செய்யவேண்டுமென பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டி நிற்கின்றது.

முன்னர் நடைபெற்ற பேரணிகளுக்கு வழிபாட்டுத் தளங்கள், தமிழ் அமைப்புக்கள், தமிழ்ப் பாடசாலைகள், தமிழர் நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பினை நல்கியதை பிரித்தானிய தமிழர் பேரவை நன்றியோடு நினைவு கூறுகின்றது.

ad

ad