புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2013

ஒரே மேடையில் மன்மோகன் சிங், நரேந்திர மோடி பங்கேற்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் படேல் அருங்காட்சியம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஒரே மேடையில் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல் அமைச்சருமான நரேந்திர மோடியும் பங்கேற்றனர். 
இந்த விழாவில் பேசிய மோடி, படேலை பற்றியும் அவரது கொள்கைகளை
பற்றியும் அறிந்து கொள்ள அருங்காட்சியகம் உதவும். அருங்காட்சியகம் அமைக்க பல கோடி மதிப்புள்ள நிலத்தை குஜராத் மாநில அரசு குறைந்த விலைக்கு கொடுத்தது. சிறந்த நிர்வாகத்திற்கான விருது வழங்க ஆரம்பித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வருடம்தோறும் சிறந்த நிர்வாகத்திற்கான விருதை குஜராத் மாநிலம் பெற்று வருகிறது. குஜராத் மாநில அரசு செய்த பணிகளுக்கு மதிப்பளித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்

ad

ad