புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2013

நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சிகள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும்: தா.பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கோவை ஏஐடியுசி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஜெனீவாவில் இன்று மனித உரிமை மாநாடு : அறிக்கையை நவநீதம்பிள்ளை சமர்பிக்கிறார்.
ஐ.நா. மனித உரிமை அமைப்பின் 24-வது கூட்டம் இன்று ஜெனிவா நகரில் நடக்கிறது. இன்று துவங்கும் மாநாடு 27-ம் தேதி வரை நடக்கிறது.இக்கூட்டத்தில் 20 நாடுகளில் நடந்த
மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டியெழுப்பி வழிபட அனுமதிக்க முடியுமா?: கீதாஞ்சலிக்கு சரவணபவன் சவால்
சிங்கள அரசினால் தரை மட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டி எழுப்பி மக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்க முடியுமா? என்று கீதாஞ்சலியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
மனிதஉரிமை ஆர்வலர்கள் மீதான அச்சுறுத்தல்! இன்றைய அமர்வில் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை
இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை சந்தித்த சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுகின்றமை குறித்து நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொலைபேசியில் அறிமுகமான பெண்ணை சந்தித்த முதல் நாளே வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கைது
தொலைபேசியில் உரையாடி அறிமுகமான இளம் பெண்ணை சந்தித்த முதல் நாளே அந்த பெண்ணை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாட கொழும்பு வாழ் தமிழர்களுக்கு அவசர அழைப்பு
தலைவர்-கே.வீ.தவராசா (தலைவர்.கொழும்பு கிளை.தமிழரசு கட்சி )
காலம்-(11-09-2013 ) புதன்கிழமை மாலை 05.30
இடம்-அக்சயா மண்டபம்,37 வது ஒழுங்கை .வெள்ளவத்தை .கொழும்பு 
சிறப்புரை-எம்.ஏ .சுமந்திர்டன் (பா.உ )

நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடைய தலைநகர் கொழும்பில் வசிக்கும் - வாக்காளர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கலந்துரையாடல் கொழும்புக் கிளையின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை 11ஆம் திகதி மாலை 5 மணிக்கு கொழும்புவெள்ளவத்தை 37வது ஒழுங்கையில் அமைந்துள்ள அக்‌ஷயா மண்டபத்தில் (செட்டிநாடு உணவக மண்டபத்தில்) நடைபெறவுள்ளது.

இக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ. சுமந்திரன் அவர்கள் பங்குபற்றி சிறப்புரையாற்றுவதுடன் விளக்கங்களையும் அளிக்கவுள்ளார்.

கொழும்பு வாழ் தமிழ் மக்களை இந் நிகழ்வில் தவறாது பங்குபற்றி ஆக்க பூர்வமான கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
சுவிசில் சிறப்புற இடம்பெற்ற பொன்.சுந்தரலிங்கத்தின் இசைக்கோலங்கள் 
 கடந்த 06.09.2013 வெள்ளியன்று மாலை  சுவிஸ் பேர்ன் நகரில் பிரபல தமிழீழ எழுச்சி பாடகர் பொன் -சுந்தரலிங்கம் அவர்களின் இசைக்கோலங்கள் என்னும் நிகழ்வு பல நூற்றுக்கணக்கான  மக்கள் மத்தியில் சிறப்பாக இடம் பெற்றது கசெரிக்குபக்கவதியன்களை இலங்கை இந்திய கலைஞர்கள் வழங்கி மெருகூட்டி இருந்தார்கள் .ஜெயா தொலைக்காட்சி அனுசரணையுடன் தயாரிக்கப்பட்ட .யாழ் இளம்கலை மன்ற ஸ்தாபகரும் வானொலி தொலைக் காட்சி புகழ் கர்நாடக சங்கீத விற்பன்னருமான ,பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் ஜெயா தொலைக்காட்சி அனுசரணையுடன் தயாரிக்கப்பட்டகானாமிர்தம் ஒளித்தட்டு ஒன்றும் அந் நிகழ்வில் வெளியிட்டு வைக்கபட்டது. இந்த ஒலித்தட்டினை சுவிசின் வர்த்தகர்களான  இம்போர்ட் தாஸ் உரிமையாளர்,   சு.ஸ்ரீதாஸ் அவர்களும் மற்றும் சாய் ரேடர்ஸ் உரிமையாளர் இ.ரவீந்திரன் அவர்களும்  பெற்றுக்கொண்டனர்.விழாவில் நடனநிகழ்வுகள் ,சிறப்புரைகளும் இடம்பெற்றன . ஆன்மீக சொற்பொழிவாளர் தி.ஸ்ரீஸ்கந்தராசா ,கவிஞர் மதி,எஸ்.கருணாமூர்த்தி,அ .நிமலன்.செ.சுரேஷ்  ஆகியோரது வாழ்த்துரைகளும் பேச்சுக்களும் நிகழ்வுற்றன .புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் புகழ்பெற்ற இந்திய மற்றும்   ஈழத்துக்கலைஞர்களோடு இணைந்து, களத்திலும் புலத்திலும் பல பாடல்களைப்   பாடியுள்ளார்.பல நூற்றுக்கணக்கான இளம்பராயத்தினருக்கு சங்கீத வகுப்புக்களை நடாத்திவருவதுடன்   புலம் பெயர் நாடுகளில் தனது சங்கீத பணிகளையும் ஆற்றிவருகின்றார்.(நன்றி, நிழல்படம்- கதிரவன் )

கண்டியை குழப்பும் சேவலை ஏன் நுவரெலியாவில் காணவில்லை ? ஆறுமுகன் பதில் கூற வேண்டும் : மனோ

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கண்டியில் சேவல் சின்னத்திலும், நுவரெலியாவில் வெற்றிலை சின்னத்திலும் போட்டியிடுகின்றது.
 காணிகள் பொதுமக்களிடம் மீளவும் கையளிக்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைவாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைவாகவும் உயர்பாதுகாப்பு வலயத்தில் விமானத்தளம் மற்றும் துறைமுக
நவியின் கருத்துக்கு அதிருப்தி ஐ.நா.செயலருக்கு அரசு கடிதம்; வெளிவிவகார அமைச்சின் மூலம் உத்தியோகபூர்வ நடவடிக்கை 
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் நவ நீதம்பிள்ளை தனது பயணத்தின் முடிவில் முன்வைத்த கருத்துகளுக்குக் கடும் ஆட்சேபனையை வெளியிட்டு ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு கடித மொன்றை அனுப்புவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் 140,000க்கு மேற்பட்ட எம்மக்கள் பூண்டோடு அழிக்கப்பட்டார்கள். காணாமல் போனார்கள். அவர்களுக்கு ஒரு நீதி விசாரணை வேண்டும். அது இலங்கை அரசால் சொல்லப்படுகின்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் நடாத்தப்படும் விசாரணயல்ல. அது ஒரு பன்னாட்டு விசாரணையாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்கின்றோம்.சி.சிறீதரன் 
பாராளுமன்ற உறுப்பினர்
“விடுதலைப் புலிகள் போராடி என்ன கண்டார்கள், முள்ளிவாய்க்காலில் மக்களைக் கொண்டு சென்று விட்டார்கள்” என்று சிலர் சொல்கிறார்கள்.
மோடியை பிரதமராக எங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளாது: திருமாவளவன்

புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள ஆதிங்கம்பட்டு கிராமத்தில் அம்பேத்கர் முழுஉருவ வெண்கலசிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழா மற்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு
சென்னையில் விநாயகர் ஊர்வலம் : 10 ஆயிரம் போலீசார் குவிப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக சென்னையில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட உள்ளனர். நாளை விநயாகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் ஒத்திவைப்பு : ஜெ., அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக முதல்வரும், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். 
அரச வங்கியொன்றில் சதம் சதமாக 80 லட்ச ரூபா கொள்ளை?
அரச வங்கியொன்றில் சதம் சதமாக 80 லட்ச ரூபா வாடிக்கையாளர் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.கடந்த ஆறு ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட வேண்டிய தொகைகளின் சதக் கணக்குகள் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.
வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாட கொழும்பு வாழ் தமிழர்களுக்கு அவசர அழைப்பு
நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடைய தலைநகர் கொழும்பில் வசிக்கும் - வாக்காளர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை ஏற்பாடு செய்துள்ளது.
1நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
சீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அளிந்து இருந்தார். மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார். தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழ் முதல் எழுத்தான ‘அ’ பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை 10 மணியளவில் பழ.நெடுமாறன் எடுத்து கொடுக்க அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணி வித்தார். பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

8 செப்., 2013

அமெரிக்க ஓபன் டென்னிஸ்  இரட்டையர் ஆண்கள் சுற்றில் இந்திய வீரர் லாந்தர் பாயாஸ் செக் நாட்டு வீரர் ச்டேபாநேக் உடன்  சேர்ந்து வெற்றி பெற்று உள்ளார்.பாசுக்கு வயது 40  .இந்த வயதில் இவர்  கிராண்ட்ஸ்லாம் சுற்றினை வென்றது பரபரப்பாக பேசப் படுகிறது 
அமெரிக்க ஓபன்: பெண்கள் இரட்டையர் போட்டியில் செக் குடியரசின் ஆண்டிரியா ஜோடி சாம்பியன்
அமெரிக்க ஓபன்: பெண்கள் இரட்டையர் போட்டியில் செக் குடியரசின் ஆண்டிரியா ஜோடி சாம்பியன்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் போட்டியின் இறுதிப்போட்டி நியூயார்க்கின் யூ.எஸ். டி.ஏ. பில்லி ஜீன் கிங் நேசனல் 
டென்னிஸ் சென்டரில் நேற்று நடைபெற்றது. இதில் வில்லியம்ஸ் சகோதரிகளை தோற்கடித்த உலகின் 5-ம் நிலை ஆட்டக்காரர்களான 
செக் குடியரசு நாட்டின் ஆண்டிரியா
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்–கயல்விழி திருமணம் இன்று நடந்தது

நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். 

மனித உரிமைப் பேரவை பருவகால அமர்வு நாளை ஆரம்பம்! இலங்கை விஜயம் தொடர்பிலும் நவிபிள்ளை பிரஸ்தாபிக்கிறார்

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வுகள் நாளை 9 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை ஜெனீவாவில்

பழ.நெடுமாறன் தலைமையில் சீமான் திருமணம்
திரைப்பட இயக்குநரும், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கும், மறைந்த முன்னாள் தமிழக அமைச்சரும், சட்டமன்ற சபாநாயகருமான
சீமானின் திருமணம் சென்னையில் இன்று நடைபெறுகிறது: பல முக்கியஸ்தர்கள் பங்கேற்பு
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருமணம் இன்று சென்னையில் நடக்கிறது.
மூன்று மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்கெடுப்பு நாளை - பல்கலைக்கழக உள்வாங்கல்கள் தொடர்பான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியாகும்
எதிர்வரும் மூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு நாளை திங்கட்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு தினங்களில் நடைபெறவுள்ளது.
நாட்டை பிளவுபடுத்துவதோ, குந்தகம் ஏற்படுத்துவதோ எமது நோக்கமல்ல! தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து சம்பந்தன்!
நாங்கள் மக்கள் மத்­தியில் ஒரு­போதும் தவ­றான கருத்­துக்­களை விதைக்­க­வில்லை. எமது தேர்தல் விஞ்­ஞா­பனம் நாட்­டுக்கு குந்­தகம் ஏற்­ப­டுத்தும் வகை­யிலோ, நாட்டைப் பிளவு­ப­டுத்தும் வகை­யிலோ அமை­ய­வில்லை என தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் யாழ்.நகர தேர்தல் பிரசாரச் சந்திப்பிற்கு பெரும் வரவேற்பு வழங்கிய வர்த்தகர்கள்!
தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ்.நகர தேர்தல் பிரசாரச் சந்திப்பிற்கு நகர வர்த்தகர்கள் பெரும் வரவேற்பு வழங்கியுள்ளதுடன், தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் அனைவரும் வேட்பாளர்களுக்கு மா லை அணிவித்து கௌரவம் வழங்கியுள்ளனர்.

பிரபாகரன் மாவீரந்தான் மஹிந்தவுக்கும் தெரியும் – விக்னேஸ்வரன்

பிரபாகரன் மாவீரன்தான் மஹிந்தவுக்கும் தெரியும் வல்வெட்டித்துறையில் விக்னேஸ்வரன் உரை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரனே.
இதை நான் மட்டும் சொல்ல வில்லை. இந்த நாட்டின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்­ஸ கூட பிரபாகரன் மாவீரன் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார் இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன்.
இதய அஞ்சலி..
தீயில் வெந்த வீரத் தமிழ்மகன் செந்தில்குமரனுக்கான
வணக்க ஒன்றுகூடல் 
09.09.2013 திங்கள் , 14:30 - 17:00 மணி 
UNO Geneva- ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்

இன உணர்வும், மான உணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழனும் வீரவணக்கம் செலுத்தவேண்டிய நேரம். எனவே அனைத்து தமிழர்களையும் இவ் வணக்க ஒன்றுகூடலிற்கு தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.

வடக்கில் தெரிவு செய்யப்படும் முதலமைச்சரினால் அங்குள்ள இராணுவத்தை குறைக்க முடியாது: பஸில்

மாகாண சபைத் தேர்தல் ஒன்றுக்கு எந்த வகையிலும் பொருத்தமற்ற கொள்கைப் பிரடகனம் ஒன்றையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.

 வடக்கில் அபிவிருத்தியை தொடர்வதா இல்லையா; சந்தர்ப்பம் வழங்கியுள்ளார் ஜனாதிபதி பசில் எச்சரிக்கை 
துவக்கில்லாத சூழல், குண்டுச் சத்தம் இல்லாத சமாதானம், கல்வி. சுகாதாரம் போக்குவரத்து என்பன தொடர்ந்தும் கிடைக்க வேண்டுமானால் ஜனாதிபதி வழங்கியிருக்கும் சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்த
சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதான அதிகாரிகள் மூவர் கொழும்பில்! அரசாங்கம் செய்வதறியாது தவிப்ப
சா்வதேச மன்னிப்பு சபையின் பிரதான அதிகாரிகள் மூன்று போ் கொழும்புக்கு சென்றுள்ளனா். சுற்றுலா வீசாவில் கொழும்புக்கு சென்ற அவா்கள் உத்தியோகபூர்வமற்ற முறையில் பல சந்திப்புக்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

7 செப்., 2013

 த.தே.கூ இன் மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் யாழ் நகரில் 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் யாழ் நகரில் இன்று   காலை 10 மணியளவில் பஸ் நிலையத்திற்கு அருகேயுள்ள வைரவர் கோவிலிலிருந்த்து ஆரம்பமானது.  
போரின் போது புலிகளின் தளபதிகள் எவரும் படையினரிடம் சரணடையவில்லை!-யாழில் சரத் பொன்சேகா
வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தளபதிகள் எவரும் படையினரிடம் சரணடையவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: கே.ஆர் 449 வாக்குகளுடன் வெற்றி: எஸ்.தாணு 252 வாக்குகள் பெற்று தோல்வ
 
2013 2015ம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட சங்கத்தின் தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. மாலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

கொழும்பில் வாழும், யாழ் மாட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பங்கேற்றார்.
Anna  (12)கொழும்பு வாழ் தமிழர் நலன் விரும்பிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்துரையாடல் கொழும்பு தமிழ் சங்க கேட்போர் கூடத்தில், செப்ரெம்பர் 5ஆம் திகதி மாலை நடைபெற்றது.
கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் முனைவோர்கள், மூத்த பிரஜைகள், ஊடகத் துறையினர் என நூற்றுக்குக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு திரு. சித்தார்த்தன் அவர்களது கருத்துக்கனைச் செவிமடுத்ததுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான தமது ஐயங்களை அவரிடம் கேள்விகளாக வெளிப்படுத்தியதுடன், தமிழ் கூட்டமைப்பிடம் எத்தகைய செயற்பாடுகளைத் தாம் எதிர்பார்க்கின்றோம் என்பவை தொடர்பான கருத்துக்களையும் வழங்கினர்.



விநாயக சதுர்த்தி

எதிர்வரும் ஞாயிறு( 08.09.2013) மாலை 17.30 மணியளவில் சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக சதுர்த்தி பூசை நடைபெற உள்ளது.அடியார்கள்  அனைவரும்  அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள் 

நடிகை ரோஜா உண்ணாவிரதம்
ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கான அமைக்க மத்திய அரசும், காங்கிரஸ் காரிய கமிட்டியும் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். 
திருத்தணியை அடுத்த நகரியில் நடந்த போராட்டத்தில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். நகரியில் உள்ள ஓம் சக்தி கோவில் அருகில் இருந்து மணிக் கூண்டு வரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் நடிகை ரோஜா பேரணியாக வந்தார்.
வடமாகாண தடகளப் போட்டி இன்று ஆரம்பம்
வடமாகாண கல்வித் திணைக்களத்தின் மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டி ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண கல்வி, கலாசார பண்பாட்டலுவல்கள்
பளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை தாக்க முற்பட்ட ஈபிடிபி
பளையில் நாளை சனி கிளிநொச்சி வேட்பாளர்களை ஆதரித்து நாடாத்தவிருந்த பரப்புரைக் கூட்டத்திற்கு முன்னாயத்தப் பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களை ஈபிடிபியினர் தாக்க முற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளன.

6 செப்., 2013

கோத்தபாயவின் இனவாத கருத்துக்கு முஸ்லிம் அமைச்சர்கள் கண்டனம்
இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கொண்டு வர முயற்சிக்கப்படுவதாக கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட கருத்தை இரு அரசாங்க அமைச்சர்கள் கண்டித்துள்ளனர்.
வாக்களிப்பு எமது மக்களின் வரலாற்றுக் கடமையாகும்: அறிவகத்தில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரத்தில் மனோகணேசன்
வாக்களிப்பு என்பது எம்மக்களின் சமூகப் பொறுப்பாக, வரலாற்றுக் கடமையாக உள்ளது. எனவே எங்களிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் தமிழர்கள் என்ற வகையில் உள்வாங்கப்பட என வேண்டும் என “ அறிவகத்தில்” நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மனோ கணேசன் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் போராட்டம் மௌனிக்கப்படவில்லை! தாயகம், தேசியம், சுயநிர்ணயம் வெல்வது உறுதி வைத்திய கலாநிதி பத்மநாதன்
இன்றைய சூழலில் தமிழருடைய பலமாகவும் அரனாகவும் இருந்த விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்டதான கருத்தை நான் ஏற்பதில்லை மாறாக அது பின்னடைவு என லங்காசிறி FMக்கு வழங்கிய செவ்வியில் வைத்திய கலாநிதி பத்மநாதன் தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயார.இலங்கைக்கு இன்னமும் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது: பேராசிரியர் ரொஹான் குணரட்ன

உள்நாட்டில் விடுதலைப் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டு மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும்,
கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.இலங்கையின் இறைமையை சீர்குலைக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
முல்லைத்தீவில் 21 வயது இளம் பெண் சடலமாக மீட்பு
முல்லைத்தீவில் 21 வயதான இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக முள்ளியவளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனையிறவில் இடம்பெற்ற வாகன விபத்தில் படைச்சிப்பாய் பலி! 7 பொதுமக்கள் படுகாயம்
கிளிநொச்சி- ஆனையிறவு பகுதியில் நேற்று இரவுஇடம்பெற்ற வாகன விபத்தில் படைச்சிப்பாய் ஒருவர் பலியானதுடன், 7பொது மக்கள் படுகாயமடைந்த நிலையில் கிளி.மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.
தம்புள்ளை காளியின் சிலையை உடைத்தவர்கள் விரைவில் அழிந்து விடுவார்கள்!- பிரசன்னா இந்திரகுமார்
தம்புள்ளையில் உள்ள காளியின் விக்கிரகத்தை உடைத்தெறிந்ததன் ஊடாக இலங்கைக்கு அழிவு காலம் ஏற்பட்டுவிட்டது. காளியின் கோபம் நிச்சயம் சிலையை உடைத்தவர்களை விரைவில் அழித்துவிடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

சிரியா மீது மேற்குலக நாடுகள் யுத்தம் தொடுப்பதற்கான நெருக்கடிச் சூழல் அதிகரித்துள்ள நிலையில் ஐ.நா சபையின் அனுமதியின்றி அமெரிக்கா தன்னிச்சையாக போர் தொடுக்கக் கூடாது என ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மீறினால் சிரிய அரசுக்கு ரஷ்யா நவீன ஆயுதங்களை வழங்கும் என அதன் அதிபர் புடின் தெரிவித்துள்ளார். சிரியாவில் நடந்து வரும் மக்கள் யுத்தத்தில் சில
இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சுஷ்மிதா பானர்ஜி ஆப்கானிஸ்தானில் வைத்து சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.
1995ம் ஆண்டு இந்தியாவின் அதிகம் விற்பனையான தலிபான்களை பற்றிய புத்தகத்தை எழுதியவர் சுஷ்மிதா பானர்ஜி. இவர் எழுதிய புத்தகத்தை தழுவியே 2003 இல் 'Escape From Taliban' எனும் திரைப்படம் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளிவந்தது. இதில் சுஷ்மிதா, தலிபான்களிடமிருந்து தப்பிய உண்மைச்சம்பவம் அப்படியே படமாக்கப்பட்டிருந்தது.
கண்ணீர் அஞ்சலி 


 

இரத்தினசிங்கம்செந்தில்குமார் 



புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,சுவிட்சர்லாந்து 




ஐ நா சபை முன்பு தீக்குளித்து இறந்தவர் புங்குடுதீவை சேர்ந்தவரும் சுவிஸ் வலைச் மாநிலத்தை சேர்ந்தவருமான இரத்தினசிங்கம் செந்தில்குமரன்(40) ஆவார் .
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஜ.நா வளாகத்தில் நேற்று தீக்குளித்து இறந்தவர் ஈழத்தமிழர் என தெரியவந்துள்ளது.  சுவிட்சர்லாந்தின் வலைஸ் மாநில தலைநகரான சியோன் பகுதியில் வசித்து வந்த 40வயதுடைய இரத்தினசிங்கம் செந்தில்குமாரன் என தெரியவந்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற ஜெனிவா ஐ.நா. முன்றலில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் நேற்று இரவு அவருக்கு மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.  இவர் தாயகத்தில் புங்குடுதீவை சேர்ந்தவர் என்றும் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர் ஒரு தமிழீழ செயற்பாட்டாளர் என்றும் தெரியவருகிறது.
நேற்று அதிகாலை ஐ.நா. முன்றலில் தீக்குளித்த இவர் காவல்துறையினரால் மீட்கப்பட்டு லவுசான் மாநிலத்தில் உள்ள சூவ் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை 4.30மணியளவில் மரணமானார்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்றுகாலை லவுசான் மாநகர சபை உறுப்பினரும் சுவிஸ் தமிழர் பேரவை செயலாளருமான த.நமசிவாயத்திடம் தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி காவல்துறையினர் தெரிவித்ததுடன் இவர் தீக்குளித்த இடத்திற்கு அருகில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உடை அணிந்த ஒருவரின் புகைப்படம் காணப்பட்டதாகவும் எனவே இவர் தமிழராக இருக்கலாம் என தாம் கருதுவதாக தெரிவித்திருந்தனர்.

Mann in Genf setzt sich selbst in Brand


In Genf hat sich in der Nacht auf Donnerstag ein Mann selbst in Brand gesetzt. Noch ist unklar, wer der Mann ist.20.minute 

தகவல் துறையின் முந்திய செய்தி

தீக்குளித்து இறந்தவர் தமிழரா? திபத்தியரா? சந்தேகம் தொடர்கிறது

ஜெனிவாவில் ஐ.நா.முன்பாக  தீக்குளித்தவர் இன்று மாலை லவுசான் சூவ் வைத்தியசாலையில் மரணமானார்.
இறந்தவர் தமிழரா அல்லது திபெத்தியரா என்பதில் சந்தேகம் நிலவுவதாக ஜெனிவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஜ.நா வளாகத்தில் இன்று (05.09.2013) அதிகாலை தீக்குளித்த நபர் இன்று மாலை 17.00 மணியளவில் மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது. இவர் எரிந்த இடத்தில் தமிழீழத் தேசியத்தலைவரின் நிழற்படம் இருந்ததாகவும். சில ஆவணங்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இவர் சுவிற்சர்லாந்தின் சியோன் பகுதியை வதிவிடமாக் கொண்டவர் எனவும் தாயகத்தின் புங்குடுதீவை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. இன்று மாலை இவர் எரிந்த இடத்தில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் வாக்களாளர் வேட்பாளர்களுக்கான தகமைகள் அறிவிப்பு 

Tn
தமிழீழத் தாயகத்தின் வடபுல மக்கள் சிறிலங்கா அரசின் வடமாகாண தேர்தலை எதிர்கொண்டிருக்கும் சமவேளை புலம்பெயர் தமிழர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தலை எதிர்கொள்கின்றனர்.

முதலாம் தவணை அரசவையினை எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் நாளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிறைவு செய்கின்ற நிலையில் இரண்டாம் தவணைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் 26ம் நாள் இடம்பெறுகின்றது
தற்போதைய செய்தி 
ஜெனீவா ஐ.நா சபை வாசலில் தீக்குளித்தவர் மரணம்

படுகாயம் அடைந்திருந்தவ்ர் இன்றுமாலை மரணமாகி உள்ளார்
ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
இன்று அதிகாலை 1:00 மணியளவில் இத் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரியவந்துள்ளனர்.
இந்நபர் காப்பற்றப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவர் இலங்கை தமிழராக இருக்கலாம் என நம்பபடுகிறது.
இவருக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட தடயங்கள் இதனை உறுதி செய்வதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த பகுதியில் எரிந்த அடையாளங்கள் இன்று காலை காணப்பட்டன.
இவர் யார் என்பதையோ இவரிடமிருந்து மீட்கப்பட்ட தடயங்களையோ காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.
இவர் இலங்கை தமிழர் தான் என்பதையும் காவல்துறையினர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் ஆட்ட அரை இறுதியில் இந்திய வீராங்கனை சானிய மிர்சா/செங் சோடி  பாட்டி /டெல்லகுவா ஜோடியிடம் 2-6,2- 6 என்ற ரீதியில் தோல்வி கண்டுள்ளது


மிக கவனமாக காய்களை நகர்த்திக்கொண்டு போகிறோம்: சுயமரியாதை, தன்மானத்தை இழக்க மாட்டோம்: வைகோ பேச்சு
தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில், ம.தி.மு.க. வளர்ச்சி நிதி மற்றும் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடைபெற்றது.
கூட்டத்தில் சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் வழங்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் பேசிய வைகோ,

காங்கிரசை எதிர்ப்பது ஒன்றே எங்கள் இலக்கு: வைகோ
 
தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில், ம.தி.மு.க. வளர்ச்சி நிதி மற்றும் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடைபெற்றது.
கூட்டத்தில் சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் வழங்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் பேசிய வைகோ,
ஊழல் என்பது இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு தலைவிரித்தாடுகிறது. 64 கோடி ரூபாய் போர்பஸ் ஊழல் செய்த ராஜீவ்காந்தி அரசை மக்கள் தூக்கி எரிந்தார்கள்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்  காலிறுதி ஆட்டத்தில் சுவிஸ் வீரர் வாவ்ரின்காசென்ற வருடம் வெற்றி பெற்றவரும் 3ஆம் தர வரிசைவீரருமானா மரியை இலகுவாக வென்றுள்ளார் .அற்புதமான நிதானமான விளையாட்டின் மூலம் இப்போது அரைஇறுதியினுள் நுழைந்துள்ளார் வவ்ரின்கா


இன்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் இரட்டையர் ஆட்டத்தில் இந்திய வீரர் பயாஸ் செக் நாட்டவரான ச்டேபானக் உடன் சேர்ந்து முதல் தர ஆட்டக்கரர்கலனா பிரைன் ஜோடியை 3-6, 6-4, 6-3 என்ற ரீதியில் வென்று இறுதியாட்டத்துக்கு நுழைந்து உள்ளா ர்

5 செப்., 2013

மற்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தில் சுவிஸ் (வீடியோ இணைப்பு)
[
உலக பொருளாதார அடிப்படையில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி சுவிட்சர்லாந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடம் வகிக்கிறது.
30.09.2013 அன்று பெல்ஜியம் ஐரோப்பிய பாராளுமன்றம் முன்றலில் நடைபெறவிருந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடலானது காலத்தின் தேவை கருதி ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முருகதாசன் திடலில் 16.09.2013, திங்கட்கிழமை நடாத்துவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் அனைத்துலக வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு எமது பலத்தினை மீண்டும் ஒருமுறை சர்வதேச நாடுகளிற்கு எடுத்துரைக்க வருமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.

16.09.2013 திங்கள் , 14:00- 17:30 மணி 
UNO Geneva- ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்

மேலதிக தகவல்கள் வெகு விரைவில்...


ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளிப்பு.
ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.இன்று அதிகாலை 1:00 மணியளவில் இத் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரியவந்துள்ளனர்.இந்நபர் காப்பற்றப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர் இலங்கை தமிழராக இருக்கலாம் என நம்பபடுகிறது.இவருக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட தடயங்கள் இதனை உறுதி செய்வதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அந்த பகுதியில் எரிந்த அடையாளங்கள் இன்று காலை காணப்பட்டன.இவர் யார் என்பதையோ இவரிடமிருந்து மீட்கப்பட்ட தடயங்களையோ காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.
இவர் இலங்கை தமிழர் தான் என்பதையும் காவல்துறையினர் உத்தியோகபூர்வதமாக அறிவிக்கவில்லை.
இதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடிகை ரஞ்சிதா- நித்யானந்தா வீடியோ வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகை ரஞ்சிதா, சாமியார் நித்யானந்தா தொடர்பாக தவறான காணொளி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சரவையில் இருந்து வைகைச் செல்வன் நீக்கம்! கட்சிப் பதவியும் பறிப்பு!
    மிழக அமைச்சரவையில் இருந்து வைகைச் செல்வன் நீக்கம் செய்யப்பட்டார். 
பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த வைகைச்செல்வன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், அமைச்சர் பழனியப்பன் பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார். 

வாரம் ஐந்து லட்சம் டாலர் ஊதியம் பெறும் கால்பந்து வீரர்

உலகில் மிகவும் அதிக அளவில் பணம் கொடுத்து வாங்கப்பட்ட கால்பந்து வீரரான கேரத் பேல் ரசிகர்களின் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு குரல் கொடுக்கும் கலைஞர்கள்

தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமித்துள்ள சிங்கள அரசு வட தமிழீழ தாயகத் தமிழர்கள் மீது திணித்துள்ள வட மாகாணத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக தாயகத்திலு

தம்புள்ளை காளி கோவில் மீதான தாக்குதல் புத்தபெருமானின் போதனைக்கு மாறானது : வேலாயுதம் கண்டனம்

இன மத வாதங்களைத் துௗண்டாது நாட்டு மக்களின் ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ கூறிய சி

ஐ.நா.வின் குற்றச்சாட்டுகள் புலிகளின் நிழல்கள் வழங்கிய சாட்சிகளேயாகும் : ஜீ.எல்.பீரிஸ்

ஐ.நா. நிபுணர் குழு மற்றும் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விடுதலைப்புலி

பாடசாலையில் பிள்ளையைச் சேர்க்க தாயின் உடம்பை லஞ்சம் கேட்ட கொழும்பு அதிபர் பிடிபட்டார் 
முதலாம் தரத்திற்கு பிள்ளையை சேர்த்துக்கொள்வதற்காக அந்த பிள்ளையைச் சேர்க்க!! பாலியல் இலஞ்சம் கேட்ட அதிபர்அகப்பட்பிள்ளையின் தாயிடம் பாலியல்
இப்போதைய  செய்தி 

ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளிப்பு?
ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
இன்று அதிகாலை 1:00 மணியளவில் இத் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளன.
இருந்தபோதிலும் இது தொடர்பில் எம்மால் உறுதிப்படுத்தமுடியவில்லை.
இது தொடர்பில் மேலதிக விபரம் கிடைப்பின் அறிவிப்போம் 
Latest news
நவிபிள்ளையின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும்: ஐ.நா 
news
இலங்கைக்கு வருகை தந்த நவிபிள்ளை முள்ளிவாய்க்காலில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி  செலுத்த முயற்சித்தமை தொடர்பாக ஐ.நா அலுவலகம் தமது கருத்தை வெளியிட்டுள்ளது. 
 
தமிழ் மக்களுக்கு வீடமைக்க நிதியில்லை என்றவர் மஹிந்த; அதனை அவர் ஒப்புக்கொள்வதற்கு தயாரா என்று சம்பந்தன் சவால் 
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து தமிழில் பேசி வாக்குக் கேட்க விருக்கும் மஹிந்தா, வன்னியில் 80 சத வீதமான மக்கள் வீடிழந்து இருக்கின்றனர். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள் என்று
 வடக்கு தேர்தலில் த.தே.கூ வெற்றி பெற நாங்கள் பூரண ஆதரவு; ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்க அறிவிப்பு 
வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி தாம் ஆதரவு வழங்கப்போவதாக  ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்கமாக அறிவித்துள்ளது. 
 புனர்வாழ்வு முகாமில் இன்னும் 241 முன்னாள் போராளிகளே உள்ளனராம் ; என்கிறது அரச அறிக்கை 
முன்னாள் போராளிகள் 108 பேர் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
இலட்சக் கணக்கான தமிழ் மக்களை
சீர்காழி : இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து பணம் பறித்து வந்து வாலிபர் கைது

நாகை மாவட்டம், சீர்காழி தாலுக்கா பழையார் மீனவ கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி கல்பனா (22) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) இவர்களுக்கு கடந்த 2005–ம் ஆண்டு

வாரிசு இருந்தால் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள் : மு.க.ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இன்று மாவட்ட திமுக செயலாளர் பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். 
விஜயகாந்த் நேரில் ஆஜராக விழுப்புரம் கோர்ட் உத்தரவு
தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகபேசிய வழக்கில்,  செப்டம்ர் 25ம் தேதி நேரில் ஆஜராகுமாறு விழுப்புரம் அமர்வு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  நீதிபதி கிருஷ்ணமூர்த்தி இந்த உத்தரவி பிறப்பித்துள்ளார்.
நாளை திமுகவில் இணைகிறார் தேமுதிக ஆஸ்டின்
தேமுதிகவில் இருந்து பிரிந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆஸ்டின் நாளை (செப்.6) திமுக வில் இணையவிருக்கிறார்.
நவிபிள்ளையின் கருத்தினாலேயே சுவிஸ் இலங்கைத் தமிழர்கள் குறித்த தனது முடிவை மாற்றியது! திவயின
இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஐ. நா மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்த கருத்துகள் காரணமாகவே சுவிற்சலாந்து அரசு அங்குள்ள இலங்கை

ஜனநாயக கட்சி வேட்பாளர் இனம் தெரியோரால் மிரட்டல்.|

ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஒருவர் தமக்கு இனந்தெரியாத
நபர்களினால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தித் தரக்கோரி யாழ் . மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை
08h

கழிவு வாய்க்கால் சீரின்மையால் யாழ். கஸ்தூரியார் வீதிக்கருகில் துர்நாற்றம்

முறையாக செப்பனிடப்படாமையால் கழிவு நீர் வீதியில் தேங்கிக் காணப்படுகின்றது.
இதனால் பிரதேச மக்களும் நகருக்கு வருவோரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
யாழ். கஸ்தூரியார் வீதியிலுள்ள கழிவு வாய்க்கால் முறையாக செப்பனிடப்படாமையால் அப்பகுதி துர்நாற்றம் வீசுகின்றது. குறித்த வீதி காப்பெற் வீதியாக்கப்பட்டுள்ள போதும் வடிகால் சீராக்கப்படாமையால் இந்நிலையை எதிர்கொண்டுள்ளது.
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியாக இது இருக்கின்ற போதும் மாநகர சபை இதனை சீர் செய்யவில்லையென வர்த்தகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வடக்கில் நடமாடும் இந்திய புலனாய்வு பிரிவினர் குறித்து தயா மாஸ்ரர் பதட்டம் 
வடக்கில் தொடருந்து பாதை நிர்மாணிப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள், துணிமணி விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் என இந்திய புலனாய்வு பிரிவை
இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கை பலப்படுத்தப்படும்!- பான் கீ மூன்
இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பான் கீ மூன் தமது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்
தமிழ் அரசியல் கைதி பிரான்சிஸ் நெல்சனின் பூதவுடலுக்கு சிறீதரன் எம்.பி அஞ்சலி
2006ம் ஆண்டிலிருந்து களுத்துறைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து மரணித்த பிரான்சிஸ் நெல்சனின் பூதவுடல் முல்லைத்தீவு கருநாட்டுக்கேணியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டிருக்கிறது.

தூக்குக் காவடி எடுத்து வந்து மயங்கி விழுந்த இளைஞன்: யாழில் சம்பவம்

கோவிலுக்கு நேர்த்தி வைத்து தூக்குக் காவடி எடுத்த இளைஞர்; மயக்கமுற்ற நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நவிபிள்ளையின் விஜயத்தின் பின் த.தே கூட்டமைப்பின் பிரிவினைவாத கருத்துக்கள் அதிகரித்துள்ளன: முஸாமில்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவீதம் பிள்ளையின் விஜயத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அதிளவான பிரிவினைவாத கருத்துக்கள்

இஸ்மாயிலின் வீட்டுக்கு புகுந்த குழு தங்கத்தை கொள்ளையிடுவதற்கு இங்கு வந்ததா? கிரிஸ் தொடர்பான ஆவணங்களைத் தேடி வந்ததா?: ரணில்

சண்டே லீடர் பத்திரிகையின் இணை ஆசிரியர் மந்தனா இஸ்மாயிலின் வீட்டுக்கு புகுந்த குழு தங்கத்தை கொள்ளையிடுவதற்கு இங்கு வந்ததா அல்லது கிரிஸ் தொடர்பான

நாட்டில் உள்ள முஸ்லிம்களை தீவிரவாதிகளாக அரசாங்கம் சித்தரிக்கின்றது. அதன் உச்சகட்ட உறுதிப்பாடாகவே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உரையும் அமைந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் தீவரவாதிகள் என்பதை சிங்களவர்கள் மனதில் புகுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையினை தூண்டும் செயற்பாட்டினை அரசாங்கம் கைவிட வேண்டும். முஸ்லிம்களுக்கும்

மலையகம் என்ற ஒரு சமுதாயம், இலங்கையில் இருக்கின்றது என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டிய கடமையிலிருந்து மலையக அரசியல் தலைமைகளும் புத்திஜீவிகளும் தவறி விட்டனர்.
 இது வேதனைக்குரிய ஒரு விடயமென்று கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரசார செயலாளருமான கே.ரி.குருசாமி தெரிவித்தார்.

நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறத் தவறினால், நீண்ட காலமாக நாம் மேற்கொண்டு வருகின்ற போராட்டங்களினுடைய, அல்லது தமிழ் தேசியத்தினுடைய வலு நிச்சயமாக குறைவடையும். ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டிய தேவை தமிழர்களுக்கு எழுந்துள்ளது. இதனை உணர்ந்துகொண்டு அவர்கள் அதனைச் செய்வார்கள் என நம்புகின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வீரகேசரி வார வெளியீட்டுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (நேர்காணல்: எம்.நியூட்டன்.)
செவ்வியின் விபரம் வருமாறு:

ad

ad