புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2013

கூட்டமைப்பின் யாழ்.நகர தேர்தல் பிரசாரச் சந்திப்பிற்கு பெரும் வரவேற்பு வழங்கிய வர்த்தகர்கள்!
தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ்.நகர தேர்தல் பிரசாரச் சந்திப்பிற்கு நகர வர்த்தகர்கள் பெரும் வரவேற்பு வழங்கியுள்ளதுடன், தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் அனைவரும் வேட்பாளர்களுக்கு மா லை அணிவித்து கௌரவம் வழங்கியுள்ளனர்.
வடக்கு மாகாணசபை தேர்தலுக்கான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இன்று காலை 11மணியளவில் வட மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன், வேட்பாளர் இ.ஜெயசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராசா ஆகியோர் கால்நடையாக நகரப் பகுதி வர்த்தகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
இந்நிலையில் வர்த்தகர்கள் மாலைகளை அணிவித்து அனைவருக்கும் பெரும் வரவேற்பு வழங்கியுள்ளனர்.
இந்த வரவேற்பில் தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டிருந்த நிலையில் கூட்டமைப்பினர் பெரு வரவேற்புடன் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
மேலும் மிக நீண்டகாலத்தின் பின்னர் இடம்பெற்ற மிக சிறப்பான சம்பவம் இது என வர்த்தகர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கின்றனர்.

ad

ad