சீர்காழி : இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து பணம் பறித்து வந்து வாலிபர் கைது
நாகை மாவட்டம், சீர்காழி தாலுக்கா பழையார் மீனவ கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி கல்பனா (22) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) இவர்களுக்கு கடந்த 2005–ம் ஆண்டு
பெரியசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவரது மனைவி கல்பனா கடந்த 2009ம் ஆண்டு முதல் பழையாரில் உள்ள கணவரின் சகோதரி மற்றும் அவரது மகன் மணிமுருகன் ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கல்பனா வீட்டில் குளிக்கும் போதும், உடை மாற்றும் போதும் மறைந்திருந்து மணிமுருகன் ஆபாச படமெடுத்து, ஆசைக்கு இணங்குமாறு மிரட்டி பலமுறை தன்னிடம் உல்லாசமாக இருந்து தன்னிடமிருந்த சுமார் 40 பவுன் நகைகள், ரூ. 13 லட்சத்தை மிரட்டி பறித்து கொண்டதாக கல்பனா சீர்காழி மகளிர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணி முருகனை கைது செய்தனர். கைதான மணிமுருகனுக்கு திருமணமாகிவிட்டது அவர் பழையாறில் மீன் தீவன வியாபாரம் செய்து வருகிறார்கள். மனைவியுடன் வசித்து வருகிறார்.