புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

Latest news
நவிபிள்ளையின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும்: ஐ.நா 
news
இலங்கைக்கு வருகை தந்த நவிபிள்ளை முள்ளிவாய்க்காலில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி  செலுத்த முயற்சித்தமை தொடர்பாக ஐ.நா அலுவலகம் தமது கருத்தை வெளியிட்டுள்ளது. 
 
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐ நாவின் பேச்சாளர் ரூபேட் கொல்விலி, ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தான் இதுவரை  சென்ற அனைத்து நாடுகளிலும் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதேபோல கடந்த 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்ற பகுதியில் இறந்தவர்கள் நினைவாக அஞ்கலி செலுத்துவது  தவறான செயல் அல்ல மேலும் அவர் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கே தனது இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்த முயற்சித்தார் என்றும் தெரிவித்தார். 
 
ஆனால் அதை இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நவி பிள்ளை அஞ்சலி செலுத்த முயற்சித்ததாக முழுமையாக தவறான கருத்தை வெளியிட்டுள்ளது என குறிப்பிட்டார்.
 
ஐக்கிய நாடுகள் சபை இது தொடர்பாக மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும். மேலும் மனித உரிமை  செயற்பாட்டாளர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளது.

ad

ad