புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கை பலப்படுத்தப்படும்!- பான் கீ மூன்
இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பான் கீ மூன் தமது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்
ஐக்கிய நாடுகளின் வருடாந்த பணிகளுக்கான அறிக்கையில் இலங்கையும் குறிப்பிடப்படடுள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூனின் அறிக்கை இன்று ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.
அதில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை கொண்டு அங்குள்ள பிரச்சினைக்கான தீர்வைக் காண விரும்புவதாக பான் கீன் குறிப்பிடடுள்ளார்.
இலங்கையின் இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக உரிய முறையில் செயற்படாது தோல்வி கண்டது என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பான் கீ மூன் தமது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த பணிக்காக ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொறுப்புக்கூறலை பாதுகாத்தல் என்ற அடிப்படையில் செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad