வவுனியா: தாயின் கோரச் செயலால் மூன்று குழந்தைகளும் பலி; கிணற்றிலிருந்து சடலங்கள் மீட்பு!!
மனநலம் பாதிப்படைந்ததாகக் கூறப்படும் தாயொருவரால் அவரது மூன்று பெண் பிள்ளைகளும் கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவமொன்று வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது குழந்தைகளை கிணற்றில் வீசிய மேற்படி தாய், பின்னர் தானும் கிணற்றில் குதித்துள்ள போதும் அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.