தயாநிதி மாறன் மீதான வழக்கு: மே 8-ல் விசாரணை
முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அமைச்சராக பதவி வகித்த காலத்தில், வீட்டில் முறைகேடாக உயர் ரக அலைவரிசை
தொலைபேசி இணைப்பகத்தையே வைத்திரு ந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை மே 8ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வருகிறது.
சன் டிவி மற்றும் தங்கள் வீட்டில் 323 உயர் அலைவரிசை பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பகத்தையே முறைகேடாக பயன்படுத்தி வந்த விவகாரத்தில், தயாநிதி மாறன் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்டது வழக்கு. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் சௌஹான், கலிபுல்லா ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்!