புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2013


இலங்கைக்கு சுவிஸிலிருந்து விடுமுறையில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில், படுகாயம் அடைந்திருந்த மற்றுமொரு மகனான ஜவீன் ஜனனும் மரணம்!!!

சுவிஸ் சூரிச் இல் வசிக்கும் கரம்பனைச் சேர்ந்த பசுபதி ஜவீன், புங்குடுதீவை சேர்ந்த ஜெயந்திமாலா தம்பதியினர் தம் பிள்ளைகளோடு இலங்கைக்கு சென்றிருந்தனர். தம் விடுமுறையை கழித்து விட்டு
சுவிஸ் நாட்டுக்கு மீண்டும் திரும்ப இருந்த வேளையிலேயே கோர விபத்து நடைபெற்றுள்ளது.

இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,கொழும்பு வெள்ளவத்தை பகுதி வீதியில் பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், கார் ஒன்று மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் ஜவீனின் சகோதரியின் மகள் (பாலசூரியன் வாரணி (29) உயிரிழந்ததுடன், சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி (16) படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு, மேலும் படுகாயமடைந்த ஜவீனின் மகன் ஜனன் (13) கொழும்பு வைத்தியசாலையில் தீவிர சிகிசைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

ஆயினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்துக்கு முன்னர் (08.05.13) செல்வன் ஜவீன் ஜனனும் மரணம் அடைந்துள்ளார்.

சுவிஸ் சூரிச் இல் வசிக்கும் கரம்பனைச் சேர்ந்த பசுபதி ஜவீன், புங்குடுதீவை சேர்ந்த ஜெயந்திமாலா (ஜெயந்தி) தம்பதிகளுக்கு மேற்படி ஜனனி (16வயது), ஜனன் (13வயது) இருவருமே செல்வப் புதல்வர்கள் என்பதும், இருவரையும் இக்கோர விபத்தில் இழந்துள்ளவ்னர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எமது முன்னைய செய்தி…
இலங்கைக்கு சுவிஸிலிருந்து விடுமுறையில் சென்ற 16வயது யுவதிக்கு யமனாக வந்த கார்! (படம் இணைப்பு) சுவிஸிலிருந்து விடுமுறைக்காக இலங்கைக்குச் சென்றவர்களுள் ஒரு சிறுமி உட்பட இன்னொருவரும் வீதி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுவிஸ் சூரிச் இல் வசிக்கும் கரம்பனைச் சேர்ந்த பசுபதி ஜவீன், புங்குடுதீவை சேர்ந்த ஜெயந்திமாலா தம்பதியினர் தம் பிள்ளைகளோடு இலங்கைக்கு சென்றிருந்தனர்.

தம் விடுமுறையை கழித்துவிட்டு சுவிஸ் நாட்டுக்கு மீண்டும் திரும்ப இருந்த வேளையிலேயே இக் கோர விபத்து நடைபெற்றுள்ளது. இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கொழும்பு வெள்ளவத்தை பகுதி வீதியில் பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், கார் ஒன்று மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி (16) உயிரிழந்ததுடன், ஜவீனின் சகோதரியின் மகள் (பாலசூரியன் வாரணி (29) படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு, மேலும் படுகாயமடைந்த ஜவீனின் மகன் ஜனன் (13) கொழும்பு வைத்தியசாலையில் தீவிர சிகிசைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணைகளின் போது காரை ஓட்டி வந்த சாரதி மதுபோதையில் இருந்ததனால் இக் கோர விபத்து நடைபெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ad

ad