தங்காலையில் இன மோதலாக மாறிய காதல் விவகாரம்
[ தங்காலை, பொது மயான வளாகத்தில் உள்ள மரியவத்தை எனும் தமிழ் கிராமத்திற்குள் புகுந்த சிங்களவர் ஒருவர், அங்கிருந்த நபர் ஒருவரை வெட்டி, குத்தி காயப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (14) இரவு 9.14 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மரியவத்தை தமிழ் கிராமத்திற்குள் நுழைந்த சிங்களவர்கள் சிலர், 15 தமிழ்களுடைய வீடுகளையும் ஒரு சிங்களவரது வீட்டையும் அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளார்.
இந்த தாக்குதலின்போது காயமடைந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் தாக்குதலின்போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மரியவத்தை கிராமத்தில் வசிக்கும் தமிழ் பெண் ஒருவரோடு சிங்களவர் ஒருவர் வைத்திருந்த கள்ளத்தொடர்பு இம்மோதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
கடந்த 12ஆம் திகதி குறித்த பெண்ணின் மகன், பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படும் சிங்களவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பழி வாங்கும் முகமாக மரியவத்தை கிராமத்திற்குள் புகுந்த சிங்களவர்கள் வீடுகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மரியவத்தை தமிழ் கிராமத்திற்குள் நுழைந்த சிங்களவர்கள் சிலர், 15 தமிழ்களுடைய வீடுகளையும் ஒரு சிங்களவரது வீட்டையும் அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளார்.
இந்த தாக்குதலின்போது காயமடைந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் தாக்குதலின்போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மரியவத்தை கிராமத்தில் வசிக்கும் தமிழ் பெண் ஒருவரோடு சிங்களவர் ஒருவர் வைத்திருந்த கள்ளத்தொடர்பு இம்மோதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
கடந்த 12ஆம் திகதி குறித்த பெண்ணின் மகன், பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படும் சிங்களவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பழி வாங்கும் முகமாக மரியவத்தை கிராமத்திற்குள் புகுந்த சிங்களவர்கள் வீடுகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.