புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2013

விபச்சார விடுதியை பிடித்த யாழ்.பிரதேச செயலாளரை கைது செய்ய பொலிஸார் முயற்சி!
யாழ். நீதிமன்றிற்கு அருகில் தனியார் விடுதியொன்றினால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி தொடர்பாக கலாசார சீரழிவுகளை தடுத்து நிறுத்திய யாழ்.பிரதேச செயலரைக் கைது செய்ய பொலிஸார் முயற்சித்துள்ளனர்.
குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய யாழ். பொலிஸார் குற்றவாளிகளை கைது செய்யாது அவர்களுக்கு இசைவாக செயற்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிஹேரா நேற்று காலை யாழ்.பிரதேச செயலாளர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரத்தை அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்ய முயற்சித்துள்ளார்.
இதன்பின்னர் இச்சம்பவம் தொடர்பில் விபச்சார விடுதி நடத்தியவர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்.பிரதேச செயலாளரிடம் அவர்கள் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நது என்ற விபச்சார விடுதியும் பிடிக்கப்பட்ட போது பொலிஸார் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க சம்பவ இடத்திற்கு வருகைதரவே இல்லை.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் இவ்வாறான விடுதிகளை ஒட்டுக்குழுக்களும் இராணுவம் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து நடாத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad