புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2013

பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த பதினான்கு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இளைஞனுக்கும் இதற்கு உடந்தையாகவிருந்த இளைஞனின் தாயாருக்கும் கம்பளை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கி இருவரையும் விடுதலை செய்துள்ளது.
14 வயது சிறுமி ஒருவரை அழைத்து வந்த கம்பளை பகுதியைச் சேர்ந்த மேற்படி தாய் வீட்டின் அறையொன்றில் தனது மகனுடன் இரவில் தனித்திருக்கச் செய்துள்ளார்.
இரவு கழிந்து மறுநாள் குறித்த சிறுமியை பாட்டியிடம் ஒப்படைத்த போது விடியமறிந்து முரண்பட்ட பாட்டி தனது பேத்தியை ஏற்க மறுத்ததுடன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனைத் குறித்து தாயும் மகனும் கைது செய்யப்பட்டு கம்பளை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
நீதிவான் நளீன் பிரசாத் டி. அல்விஸ் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். இதேவேளை குற்றச்சாட்டு தொடர்பில் கிடைக்கப்பெற்ற வைத்தியப் பரிசோதனை அறிக்கையிலும் சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நீதிவான் தாயாரை 10 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையிலும் மகனுக்கு 25 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையிலும் ரொக்கப்பிணையில் விடுதலை செய்து விசாரணைகளை ஒத்திவைத்தார்.

ad

ad