தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை நான்காம் மாடியில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
புலம்பெயர் தமிழர்களினால் இயக்கப்படும் தமிழ் இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியிருந்த ‘சமகால அரசியல் நிலைமைகள்’ குறித்த செவ்வியொன்று தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டதாக சிறிதரன் எம்.பி. தெரிவித்தார்.