புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2012


பிரபாகரன் சொன்னதை உடனடியாக செயல்படுத்துங்கள்!- நடேசனின் கடைசி கடிதம் அம்பலம்

புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.பா.நடேசன் அவர்கள் இறுதியாக எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. புலிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்து முள்ளிவாய்க்காலில் நின்றவேளை, கடற்படைத் தளபதி சூசை அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் ஒலிவடிவில் வெளியாகியது யாவரும் அறிந்ததே.
இதேபோல வெள்ளைக்கொடியோடு சென்று இராணுவத்திடம் சரணடைய முன்னர், பா.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் பல சர்வதேச பிரமுகர்களைத் தொடர்புகொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக லண்டனில் வசித்த மரியா கெல்வின் என்னும் ஊடகவியலாளரையும் அவர்கள் தொடர்புகொண்டு தாம் சரணடைய இருப்பதைத் தெரிவித்தனர். இச் செய்திகள் ஐ.நா அதிகாரி நம்பியாருக்கும், மற்றும் இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் பரிமாறப்பட்டது. சரணடைவதற்கு முன்னதாக அவர்கள், சில கடிதங்களை முள்ளிவாய்க்காலுக்கு வெளியே அனுப்பியுள்ளனர். இவை மக்களோடு மக்களாகச் செல்லவிருந்த புலிகள் உறுப்பினர் ஊடாகவும் மற்றும், சட்டலைட் தொலை நகல் ஊடாகவும் அனுப்பப்பட்டது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியே சென்ற அவரது கடிதம் ஒன்றை அதிர்வு இணையம் பெற்றுள்ளது. இதனை நாம் குறிப்பிட்டது போல இங்கே வெளியிடுகிறோம்:
கடிதத்தில் எழுதப்பட்ட விடையம்:
கடிதமானது சுடர் என்னும் போராளிக்கு எழுதப்பட்டுள்ளது. இக் கடிதத்தை முள்ளிவாய்காலில் இருந்து கொண்டுசென்று, சுடரிக் கைகளில் கொடுக்க ஒரு நபரை ஏற்பாடு செய்துள்ளார், பா.நடேசன் அவர்கள். காஸ்ரோ அவர்கள், எற்கனவே சுடர் என்னும் போராளிக்கு சில விடையங்களைத் தெரிவித்துள்ளதாகவும், தேசிய தலைவர் குறிப்பிட்டது போல அனைத்தையும் செயற்படுத்துமாறும் இக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. தேசிய தலைவர் எதனைச் செய்யச் சொல்லி உள்ளார் என்பது தொடர்பாக இக் கடிதத்தில் எழுதப்படவில்லை. மேலும் செய்மதி தொலைபேசியில் எதனையும் பேசமுடியாது என்று பா.நடேசன் அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே அவை ஒட்டுக்கேட்க்கப்படுகிறது என்ற விடையமும் இதனூடாக நன்றாகப் புலப்படுகிறது. அத்தோடு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், இங்கு எல்லாம் நிறைவடைந்து விட்டதாகவும் அவர் அக் கடிதத்தில் எழுதியுள்ளார்.
இந்தியா சென்று முடிந்தால் வைகோவைப் பார்க்குமாறும், அவர் சுடருக்கு அறிவுறுத்தியுள்ளார். இக் கடிதத்தை கொண்டுவரும் நபர்(XXXX பெயரை நாம் வெளியிடவில்லை) மேலும் சில விடையங்களை உங்களுக்குத் தெரிவிப்பார் என்றும் பா.நடேசன் அவர்கள் இக் கடிதத்தில் எழுதியுள்ளார். புலிகள் இயக்கம் பாரிய பின்னடைவை சந்தித்த பின்னர் எழுதப்பட்ட இக் கடிதம் மிக முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது. தேசிய தலைவர் பா.நடேசனிடம் எதனைச் சொன்னார், அவர்கள் இருவரும் இணைந்து எதனைச் செயல்படுத்தச் சொன்னார்கள் என்பது போன்ற விடையங்களே இன்னும் இலைமறை காயைப்போல உள்ளது. இவையும் வெகுவிரைவில் வெளிவரும் என நம்பப்படுகிறது.

ad

ad