புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2012


ஆட்சி அமைக்க கிழக்கில் தயார்! ஆளுநருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடிதம்
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை அமைப்பதற்கான தயார் நிலையில் தாங்கள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்று கிழக்கு மாகாண ஆளுநருக்கு அதிரடியாக அறிவித்திருக்கிறது.
மாகாண ஆளுநர் றியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரமவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த,
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சி என்ற வகையில் இந்தக் கடிதத்தை அனுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தேசிய சுதந்திர முன்னணியும் கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்க ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,
மாகாணசபைக்குத் தெரிவான உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலைத் தேர்தல் ஆணையாளர் வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர் முதலமைச்சர் பெயரை அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணசபையில் கூட்டாட்சி ஒன்றை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இந்தக் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad