நடுக்கடலில் 22 நாட்களாக தத்தளித்த 61 இலங்கை தமிழர்களை மீட்ட தமிழக மீனவர்கள்
இலங்கையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வல்வட்டித்துறை, பருத்தித்துறை, நீர்கொழும்பு, முல்லைத்தீவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 61 இலங்கை தமிழர்களும், 4 சிங்களவர்களும் இலங்கையில் போதுமான வேலைவாய்ப்பும், வருமானமும் இல்லாத காரணத்தால் இலங்கையில் இருந்து வெளியேறி ஆஸ்திரே-யாவில் தஞ்சம் அடையும் நோக்கத்தோடு போலீயான ஏஜெண்டிடம் இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் ரூபாய் 3 லட்சம் வரை கொடுத்து ஒரு விசைப்படகில் 65 பேரும் கடந்த 22.08.2012 அன்று இலங்கையின் பருத்தித்துறையில் இருந்து ஆஸ்திரே-யாவுக்கு புறப்பட்டனர்.
அப்போது நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இலங்கை தமிழர்களின் அலறலை கேட்டு தமிழக மீனவர்கள் அவர்களை மீட்டு, தேவையான உணவுப்பொருட்களை கொடுத்ததுடன், தங்கள் படகில் இலங்கை தமிழர்களின் படகை கட்டி இழுத்துக்கொண்டு இரண்டு நாட்கள் பயணம் செய்து இன்று (14.09.2012) அதிகாலை 1 மணி அளவில் நாகை துறைமுகத்தை வந்தடைந்தனர்.
மேலும் கரைக்கு வந்த இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமானத்தோடு மீனவர்கள் உணவு, குடிநீர் போன்றவற்றை வழங்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் படகில் வந்த இலங்கையைச் சேர்ந்தவர்களை, நாகை புத்தூர் அண்ணா மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்களிம் விசாரணையும் மேற்கொண்டனர்.
விசாரணையின் முடிவில் மீண்டும் அவர்களை இலங்கைக் அணுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படம் மற்றும் செய்தி: செல்வகுமார்
படம் மற்றும் செய்தி: செல்வகுமார்