மே மாதம் 19ஆம் திகதியுடன் விடுதலைப் புலிகளுடனான இன அழிப்புப் போரை, தனது படையணி மூலமும் அயல் நாடுகளின் உதவி கொண்டும் மகிந்த ராஜபக்ச முடிவுக்குக் கொண்டு வந்த பிற்பாடு, இந்த நாடு படும்பாடு இப்போது சொல்லுந்தரமன்று. அதிலும், யாழ். குடாநாடு படும் உபத்திரவங்கள் வார்த்தைகளால் எடுத்தியம்பவும், வரிகளாய் எழுதிக் கொள்ளவும் முடியாதவை.
விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்திரித்து அந்தப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றியதாகக் கூறும் இனவாதி