புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 பிப்., 2016

சாதி வெறியன் ஒருவனுக்கு வாழ்நாள் சாதனையாளன் விருது கொடுத்து மலத்தை அள்ளி நீங்களே உங்கள் முகத்தில் பூசிக்கொண்ட ஊடகக் கனவான்களே!
சத்தியமூர்த்தி 
இந்த மனிதனை உங்களுக்குத் தெரிகிறதா?
சிங்கள இனவெறிப்படைகளின் குண்டு வீச்சுக்கும் எறிகணை மழைக்கும் மத்தியில் இனப்படுகொலை ஆதாரங்களை ஓடி ஓடி செய்தியாக்கினானே-எங்கள் இனத்தின் பேரவலத்தை நிமிடத்துக்கு நிமிடம் தொடர்ச்சியாக வானலைக்கு தந்தானே?தன்னுடைய சின்னஞ்சிறு குழந்தையின் தன்னுடைய அன்புத் துணைவியின் எதிர்காலத்தை நினைத்து தன்னை பாதுகாத்துக்கொள்ள விரும்பாமல் எங்கள் மக்களி
ன் அவலங்கள் பதியப்பட வேண்டும். எமது இனத்துக்கு இழைக்கப்படும் கொடூங்களை வெளிஉலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக யுத்த முனையில் ஓய்வின்றி உறக்கமின்றி ஓடி ஓடி தகவல்களை பதிவு செய்து எதிரியின் எறிகணை வீச்சில் மூச்சடங்கிப் போனானே- இவன்தான் ஐயா சாதனையாளன்- இவன்தான் ஐயா வாழ்நாள் சாதனையாளன்-இவன்தான் ஐயா வரலாற்று சாதனையாளன்.
உங்களுக்கு தெரியுமா இவன் வீரச்சாவடைந்த போது இவனது உடலத்தை போர்க்கக் கூட துணி இருக்கவில்லை. இவனது துணைவியின் சேலையால் தான் இவனது உடலம் மூடப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளன் என்ற சொல்லக்கே தகுதியில்லாதவனுக்கு விருது கொடுத்து மகிழும் மமதைபிடித்த கனவான்களே உங்களுக்கு மனச்சாட்சி இருந்தால் இவனது இந்த உடலத்தை பார்த்தாவது உங்கள் தவறை உணருங்கள்.இவனது ஆண்மா உங்களிடம் இருக்கும் மமதையை போலித்தனத்தை சுட்டெரிக்கட்டும்ம்

ad

ad