புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2016

அரவக்குறிச்சியில் ஜோதிமணி போட்டி? - பரபரப்பு விளம்பரங்கள்



 திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தங்களை முன்னமே இணைத்துக்கொண்டு கூட்டணியை உறுதி செய்து கொண்டது. இன்னும்  பிற கட்சிகள் திமுக கூட்டணிக்குள் வருவதற்கு நேரடியா கவும், மறைமுகமாகவும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 

இதனால் எந்த கட்சிக்கு எத்தனை சீட்டு என்று இன்னமும் முடிவு எட்டப்படாத நிலையில் உள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தை சேர்ந்தவ, , காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பை சேர்ந்தவரும், ராகுல்காந்திக்கு மிகவும் நெருக்கமானவருமான ஜோதிமணி  கடந்த முறை கரூர் மாநகரில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆனால் இந்த முறை கரூர் மாவட்டத்தில் உள்ளடக்கிய அரவாக்குறிச்சியில் தான் போட்டியிட போவதாகவும், ஆதரிப்பீர் என்று விளம்பரத்தை தன்னுடைய முகநூலிலும் டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார்.

இது கட்சிகாரர்களுக்கு இடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம்,  அரவக்குறிச்சி தொகுதி தற்போது திமுக. வசம் உள்ளது. அதற்கு எம்.எல்.ஏ வாக கே.சி.பி உள்ளார். கூட்டணியில் இன்னும் சீட்டு உறுதியாகாத நிலையில் எப்படி வெளியிடலாம் என்றும்,  திமுக மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ad

ad