புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2016

காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியின் கணவர் திடீர் மரணம்!

 இந்திய மகிளா காங்கிரஸ்  கட்சியின்  பொதுச் செயலாளரும்,  விளவங்கோடு எம்.எல்.ஏ.வுமான விஜயதாரணியின் கணவர் வழக்கறிஞர் சிவகுமார் கென்னடி இன்று(சனி) சென்னையில் திடீர் மரணமடைந்தார்.


சிவகுமார் கென்னடி, கடந்த சில மாதங்களாக உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,இன்று வழக்கம் போல தனது அலுவல்களைக் கவனிக்க சென்னை உயர் நீதிமன்றம் சென்றுள்ளார். மதிய உணவு முடித்த பின், மயக்கம் வருகிறது என்று கூறி தனது டிரைவரிடம் மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து, சென்னை சி.ஐ.டி.காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சில மணி நேரங்களில் அங்கு சிகிச்சை பலன்றி   சிவகுமார் கென்னடி(53) உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மருத்துவ மாணவியான அவரின் மகள், தந்தை இறந்த தகவலை டெல்லியில் இருந்த  விஜயதாரணிக்கு உடனடியாக  தெரிவித்தார்.
( கோப்பு படம்) 

டெல்லியில், மகளிர் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று பேசிக்கொண்டிருந்த விஜயதாரணி, நிகழ்ச்சியை பாதியில் ரத்துச் செய்துவிட்டு இன்று மாலை 6.15 மணி விமானத்தில் சென்னை திரும்புகிறார். விஜயதாரணியின் கணவர் இறந்த தகவல் பற்றி அறிந்ததும் ,டெல்லியில் உள்ள சோனியாகாந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.

ad

ad