புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 பிப்., 2016

மகிந்த இன்றும் கறுப்பு நிற கோட் அணிந்து நீதிமன்றில் ஆஜர்

சி.எஸ்.என். தொலைக்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத செயற்பாடுகள் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ச, ரொஹான் வெலிவிட்ட உள்ளிட்ட நால்வரின் பிணை கோரிக்கை மனுக்கள் மீண்டும் இன்று கடுவெல நீதிமன்றத்தில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் வழமையாக அணியும் தேசிய ஆடைக்கு மேலாக சட்டத்தரணிகள் அணியும் கறுப்பு நிற கோட்டினை அணிந்து மன்றில் ஆஜரானார். மற்றும் மகிந்தவின் புதல்வரும்,  யோஷித்த ராஜபக்சவின் சகோதரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவும் சமூகமளித்திருந்தார். 

இந்நிலையில் குறித்த பிணை மனு விசாரணை இம்மாதம் 17 ஆம் திகதிக்கு அன்று இடம்பெற்றவேளையிலும் மகிந்த ராஜபக்ச கறுப்பு நிற கோட்டினை அணிந்து நீதிமன்றதிற்கு சமுகமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

ad

ad