அல்ஜீரியா நாட்டிற்கு கடத்தி செல்லப்பட்ட 34 அகதிகள் நைஜீரிய பாலைவனத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி நைஜீரிய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் என 34 பேர் கடந்த வாரம் பாலைவனத்தினை கடக்க முயன்று பின் பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளது.