புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2016

காங்கிரஸில் 7 மாவட்டத் தலைவர்கள் அதிரடி நீக்கம்


 காங்கிரஸ் கட்சியில் 7 மாவட்டத் தலைவர்களை நீக்கம் செய்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்ட அறிக்கை:  ‘’காங்கிரஸ் கட்சியின் மாவட்ட கமிட்டித் தலைவராக பதவி வகிக்கும் பூவை பீ.ஜேம்ஸ், வெங்கடாசலம், எஸ்.ராஜ்குமார், கே.ராம்நாத்,எஸ்.கே.டி.பி.காமராஜ், வி.பாலையா, கே.டி.ராஜகுமாரவேல் ஆகியோர் நீக்கப்படுகிறார்கள். அவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் விவரம் வருமாறு:

திருவள்ளூர் தெற்கு- ஜெ.பாலமுருகன், திருப்பூர் புறநகர்- கே.தென்னரசு, நாகப்பட்டிணம் வடக்கு- டி.சொக்கலிங்கம், திருநெல்வேலி மேற்கு- எஸ். பழனி நாடார், திருநெல்வேலி மாநகர்- டி.எல்.உமாபதி சிவன், கன்னியாகுமரி கிழக்கு- ஆர்.ராதாகிருஷ்ணன், கிருஷ்ணகிரி- எஸ்.நாரயணமூர்த்தி.’

ad

ad