புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2016

மோடியிடம் ஜெ., கொடுத்த மனுவில் உள்ள 29 அம்ச கோரிக்கைகள்!

டெல்லியில் இன்று பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் ஜெயலலிதா.  இந்த சந்திப்பின் போது,  தமிழகத்தின் 29 அம்ச கோரிக்கைகள் கொண்ட மனுவை அளித்தார்.

காவிரியம் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும், இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்க வேண்டும், பறக்கும் ரயிலையும், மெட்ரோ ரயிலையும் இணைக்க வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,  நதி நீர் இணைப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், முல்லைப்பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும், மாநில அரசு பரிந்துரை இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும், மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க வேண்டும், மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும்,21 ம் மீனவர்களையும் 92 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,  ஜிஎஸ்டி மசோதாவில் அதிமுக கோரியுள்ள திருத்தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், உணவு தானியங்கள் வழங்குவதை குறைக்க கூடாது, மருத்துவ நுழைவுத்தேர்வை அமலபடுத்த மாநில அரசை கட்டாயப்படுத்தக்கூடாது.  மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்க எடுக்க வேண்டும், தமிழக கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும், தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அம்மனுவில் உள்ளன.

ad

ad