தமிழர் பிரச்சினைக்கு ஜெயலலிதாவின் தீர்வுத் திட்டத்தில் தங்கியில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன்
தெரிவித்துள்ளதாக இந்தியன் எஸ்பிறஸ் தெரிவித்துள்ளது.
தேர்தலில் வெற்றியீட்டியமைக்காக தாம் வாழ்த்து தெரிவித்ததாகவும் உள்நோக்கம் எதுவும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முழுக்க முழுக்க ஜெயலலிதா தீர்வுத் தி;ட்டமொன்றை வழங்குவார் என தங்கியிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாம் வேறும் தரப்பினரில் தங்கியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பிரிவிணைவாதத்தை தாம் கோரவில்லை எனவும் அதற்கான போராட்டங்கள் நடத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமைகளையும் இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.