கனேடியப் பிரதமரினால் பெப்ரவரி 2016 இல் அறிவிக்கப் பட்டதற்கமைய ,கனடா சமூக பாதுகாப்பு தீர்ப்பாயத்திற்கான (Security Tribunal of Canada)
அங்கத்தவர்களைச் சேர்க்க கனேடிய அரசு புதிய முறை ஒன்றை வெளியிடுகிறது, என குடும்பங்கள், சிறுவர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் Jean-Yves Duclos அறிவித்துள்ளார்.
இத்தீர்ப்பாயத்தில் அங்கம் வகிப்பதற்காக , கனேடிய அரசு நாடெங்கிலும் இருந்து ஆர்வமுள்ளோரை எதிர்பார்க்கிறது. மேலும் அத்தகையோரை,இப்புதிய முறைக்கமைய விண்ணப்பிக்கும் படியும் அரசு ஊக்கமளிக்கிறது.