புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2016

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி பேரணி



முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி சென்னையில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி இந்த பேரணி சென்றது. பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் அன்புமணி, சீமான், சத்தியராஜ், நாசர், விக்கிரமன், வேல்முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்குமாறு பேரணியின் முடிவில் தலைமைச் செயலகத்தில் மனு அளிக்க உள்ளனர்.

ad

ad