ஈழத்து மாகலைஞர் தவில் வித்துவான் தட்சணாமூர்த்தி பற்றி அம்சன் குமார் தயாரித்த ஆவணப் படத்துக்கும் இம்முறை இந்திய தேசிய விருது கிடைத்துள்ளது.
1933ம் ஆண்டு இணுவையில் பிறந்த தவில் கலைஞர் தட்சணாமூர்த்தி, தனது தந்தையாரான விஸ்வலிங்கத்தை முதல் ஆசானாகக் கொண்டு இசைக்கலையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார்.
அதன்பின்னர் இணுவிலைச் சேர்ந்த பிரபல தவில் வித்துவான் சின்னத்தம்பியிடமும் பின்னர் யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும் கற்றுத் தேர்ந்திருந்தார்.
தன் மகனை ஒரு தவில் மேதையாகக் காண ஆசைப்பட்ட தந்தையாகிய