புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2016

2ஜி பின்னணியில் ஸ்டாலின் என குற்றச்சாட்டு : வைகோவுக்கு நோட்டீஸ்

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி பலி ஆடு ஆக்கப்பட்டிருக்கிறார். கோடிக்கணக்கில் கொள்ளை யடித்த கலைஞர் குடும்பத்தினர் திரைமறைவில் பதுங்கிக் கொண்டனர்.

ஷாகித் பாவ்லா சென்னை வந்து மு.க.ஸ்டாலினைச் சந்தித்த போது என்ன பரிமாற்றம் நடந்தது. கோடிக்கணக்கில் வழங்கப்பட்ட டிடி. யாரிடம் கொடுக்கப்பட்டது. ஷாகித் பாவ்லா- ஸ்டாலின் சந்திப்பை சிபிஐயிடம் சொன்ன பெரம்பலூர் சாதிக் பாட்ஷா  தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார்.

2ஜி ஸ்பெக்டரம் பின்னணியில் இருந்தது ஸ்டாலின்தான். வேண்டுமானால் என் மீது மற்றொரு வழக்குப் போடப்பட்டும் . அதை சந்திக்க தயாராக உள்ளேன்’’ என்றார்.

இன்று காலையில் வைகோ பேட்டி அளித்த நிலையில், மாலையில் ஸ்டாலின் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  அதில், ’’செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நீங்கள்என் கட்சிக்காரின் மான்பை குறைக்கும் வகையில் பேசியுள்ளீர்கள். இந்த நோட்டீஸை பெற்றுக் கொண்ட 3 நாள்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையேல் உங்கள் மீது வழக்குத் தொடரப்படும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ad

ad