புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2016

அ.தி.மு.க.வை. தோற்கடிப்பதே எங்கள் கூட்டணியின் குறிக்கோள் என்கிறார் வைகோ

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க.வை தோற்கடிப்பதே எங்கள் கூட்டணியின் குறிக்கோள் என்று மக்கள் நலக்
கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறினார்.

சென்னை அண்ணா நகரில் இன்று செய்தியாளர்களை மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ சந்தித்தார். அப்போது, மக்கள் நல கூட்டணி-தே.மு.தி.க. கூட்டணி குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறிய கருத்து பற்றி செய்தியாளர்கள் வைகோவிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ''பூஜ்யம் என்று கூறியவர்கள் விஜயகாந்த் அலுவலகத்தில் தவம் கிடந்தது ஏன்?" என்றார். மேலும் தொடர்ந்தவர், ''வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிப்பதே தங்கள் கூட்டணியின் குறிக்கோள். எங்கள் கூட்டணியில் சேரும்படி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசனுக்கு மீணடும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

ad

ad