தம்மை சொந்த இடங்களில் மீள்குடியேற்றக்கோரி உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை விரைவில் முடித்து வைப்பேன்
என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த இடத்தில் மீள்குடியமர்த்துமாறு கோரி இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்கின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தொலைபேசி வழியாக தொடர்பினை ஏற்படுத்தி மக்களின் நிலமையை அறிந்ததுடன் இது தொடர்பாக நல்லாட்சி அரசிடம் நேரடியாக பேசி முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.