சதாமின் 1000 மில்லியன் டாலரை அடித்த நபர் யார் ?
அமெரிக்க
படைகள் ஈராக்கை கைப்பற்றிய வேளை, சதாம் தலைமறைவானர். பல மாதங்களுக்குப் பின்னர்
அவர் ஒரு பதுங்கு குழியினுள் இருப்பதாக அமெரிக்க படைகளுக்கு தகவல் கிடைத்தது. சதாம்
எங்கே பதுங்கியிருக்கிறார் என்று தெரிவித்தால் 10 மில்லியன் டாலர்கள் பரிசாகக்
கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இப் பணத்துக்கு ஆசைப்பட்டு ஒருவர் சதாம்
பதுங்கியிருந்த இடத்தைக் காட்டிக்கொடுத்தார். அமெரிக்க படைகளும் அவரைக்
கைதுசெய்தது. ஆனால் காட்டிக் கொடுத்த நபருக்கு அந்த 10 மில்லியன் டாலர்கள்
கிடைக்கவில்லை. ஏன் தெரியுமா ? அவர் உயிரோடு இல்லை. யாரோ அவரைச் சுட்டுவிட்டார்கள்
என்கிறது சி.ஐ.ஏ. அது ஒருபுறம் இருக்க சதாமை பிடித்த பங்கர்(பதுங்கு குழியில்)
இருந்து சில ஆவணங்கள் எடுக்கப்பட்டது.