http://eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-kavanayiirppswiss%20(2).jpgயாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் மீது சிங்கள காட்டுமிராண்டித்தனமான ராணுவத்தினர் தாக்குதலை நடத்தி பல மாணவர்களை படுகாயங்களுக்கு உட்படுத்தியதோடு
நேற்று பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி
நான்கு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவற்றை கண்டித்து தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கண்டன கவனயீர்ப்பு போராட்டங்களை பல அமைப்புக்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தவரிசையில் உலகில் மிக முக்கியமான அமைப்பான ஜக்கிய நாடுகள் சபையின் முன்றலில் எதிர்வரும் 04.12.2012 அன்று மாபெரும் கண்டன கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
காலத்தின் தேவைகருதி இந்த கண்டன கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு உங்களது தாயக கடமையை செய்யுமாறு ஈழதேசம் இணையம் கேட்டுக்கொள்கிறது.