புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2012

 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுபூர்வமான நான்காவது பாராளுமன்ற அமர்வு, பிரித்தானியாவில் இடம்பெறுகின்றது.


மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த உலகத் தமிழினம் தயாராகி வரும் நிலையில், சுதந்திர தமிழீழம் எனும் மாவீரர்களது கனவினை வென்றெடுக்க, சனநாயக வடிவில் தோற்றம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுபூர்வமான நான்காவது பாராளுமன்ற அமர்வு, பிரித்தானியாவில்
இடம்பெறுகின்றது.
எதிர்வரும் நவம்பர் 29-30 டிசம்பர் 1 மற்றும் 2ம் நாட்களில் இது இடம்பெறுகின்றது.

நவ 29ம் நாள் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் உத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வில், பொதுமக்களையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

BRENT TOWN HALL/Forty Lane, Wembley, /Middlesex,HA9 9HDஎனும் முகவரியில் 6pm to 10 pm மணிக்கு தொடக்க அமர்வு இடம்பெறுகின்றது.

இதேவேளை நா.த.அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்விற்கு முன்நிகழ்வாக, பிரித்தானியப் பாராளுமன்றத்தில் நவ 29ம் நாள் புதன்கிழமை மாநாடொன்றும் இடம்பெறுகின்றது.

ஈழத் தமிழர்தாயகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் ஆகியனவற்றினைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை அமைத்துக் கொள்ளவது குறித்தும், ஐ நா வின் உள்ளக மீளாய்வுக் குழுவின் அறிக்கை வழியே சிறிலங்காவுக்கு தொடர்பில் அனைத்துலக ஆணையம் ஒன்று நிறுவப்படவேண்டியமை அவசியம் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வினை உலகத் தமிழர்கள் இணைய வழியூடகங்கள் ஊடாக நேரடியாக காணுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன

ad

ad