புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2012


சென்னை மாவீரர் நாள் நிகழ்வு: வைகோ, பழ.நெடுமாற​ன், கொளத்தூர் மணி, மல்லை சத்யா , புகழேந்தி தங்கராசு, வேளச்சேரி மணிமாறன் உரை
தமிழீழ விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த போராளிகளை நினைவுகூரும் நாளான மாவீரர் நாள் 2012 நவம்பர் 27 அன்று சென்னை தியாகராயார் முத்துரங்கன் சாலையில் மறுமலர்ச்சி திமுக ஏற்பாட்டில் மாவீரர் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் அய்யா பழ.நெடுமாறன், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, திராவிடர் விடுதலைக் கழகத்தோழர் கொளத்தூர் மணி, மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வீரவணக்க உரையாற்றினார்.
சென்னையில் நடைபெறும் ஈழ ஆதரவு கூட்டங்ககளுக்கு சிறப்பான ஏற்பாடுகளை தொடர்ச்சியாக செய்துவரும் மறுமலர்ச்சி திமுகவின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் வேளச்சேரி மணிமாறன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
தேன் கூடு, திலீபன் போன்ற வரலாற்றுச்சிறப்புமிக்க திரைப்படங்களில் ஈழப்போராட்ட காட்சிக்கான துவக்குகள், வெடிகுண்டுகள் அளித்த "Bomb" பழனி குழுவினர் மாவீரர் வீரவணக்க வடிவமைப்பை சிறப்புடன் அமைத்திருந்தார்.

ad

ad