புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2013

அனந்தி சசிதரனின் அமெரிக்கப் பயணம் இரத்து
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று அமெரிக்கா செல்லவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேகரிப்பதற்காக இன்று அமெரிக்கா பயணம் மேற்கொள்வதாக கூறியிருந்தேன். எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அமெரிக்காவிற்கான பயணத்தினை ரத்து செய்துள்ளதாக அனந்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் சந்தானம் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம் வீடுகளிலும், அலுவலகங் களிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது. 
சந்தானம் வீடு தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி எதிரில் இருக்கிறது. அங்கு வருமான வரி அதிகாரிகளில் ஒரு குழுவினர் சென்றனர். கேட்டை மூடிக்கொண்டு வீட்டில் அறை அறையாக சென்று சோதனை நடத்தினார்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாழ் நகரில் அங்காடி வியாபாரம் களைகட்டியுள்ளது.
யாழ் நகரின் பிரதான வீதிகளில் நடைபாதைக் கடைகளுக்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் தென்னிலங்கை வியாபாரிகள் நடைபாதைக்

கல்முனை மாநகர சபை நிதி குழு உறுப்பினர் தெரிவில் மாநகர சபை உறுப்பினர் ஜெயக்குமார் அமோக வெற்றி.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று புதன்கிழமை மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபையின் நிதிக்குழு உறுப்பினர்கள் தெரிவில் ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையே பலத்த போட்டி நிலவியதால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஓர் அங்கமாக அடுத்த ஆண்டிற்கான நிதிக் குழு உறுப்பினர்கள் தெரிவு நடைபெற்றது.

மேயர் தவிர நிதிக் குழுவிற்கு ஐந்து பேரை தெரிவு செய்வதற்காக மாநகர சபை உறுப்பினர்களான ஏ.பறக்கதுல்லா, எஸ்.உமரலி, ஏ.எம்.றியாஸ், எஸ்.ஜெயகுமார், ஏ.ஏ.பஸீர், ஏ.எம்.பிர்தௌஸ் மற்றும் எஸ்.சாலித்தீன் ஆகிய ஏழு உறுப்பினர்களின் பெயர் முன்மொழியப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வு படைத்த எல்லா
கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியும் கூட, பத்திரிகைகளில் இன்று
வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது பிரதமர் செல்லக் கூடுமென்று யூகிக்கக் கூடிய வகையில் உள்ளது. அப்படி தமிழர்களை வேட்டையாடிய சிங்கள வெறியர்
கள் நடத்துகின்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அதனுடைய விளைவுகளை அவர்கள் சார்ந்துள்ள கட்சியே அனுபவிக்க நேரும்.
இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேர் இயன் பொத்தம் நாளை நவம்பர் முதலாம் திகதி முதல் இலங்கையில் மேற்கொள்ளவுள்ள உதவு நடைப் பயணத்தில் உலகளாவிய கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நடைப்பயணத்தின் மூலம் வடக்கில் செரிட்டி ஒப் பௌன்டேசன் குட்னஸ் என்ற உதவு அமைப்பு ஒன்று நிறுவப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு வருமாறு மன்மோகன் சிங்கிற்கு வடமாகாண முதலமைச்சர் அழைப்பு
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணத்துக்கு இந்திய பிரதமர் வருகைத்தர வேண்டும என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவைக் குழு கருத்தரங்கில் ஜெகத் டயஸ் கலந்து கொள்ள அனுமதி மறுப்பு!
போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள  இராணுவ அதிகாரிகளில் ஒருவரான, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் கலந்து கொள்ள   சர்வதேச செஞ்சிலுவைக் குழு அனுமதி மறுத்துள்ளது.
இரண்டு மகள்களை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 120 ஆண்டு சிறை!
இரண்டு மகள்களை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 120 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

30 அக்., 2013

Australia 350/6 (50 ov)
India 351/4 (49.3 ov)
அவசர செய்தி ..காவல் துறையின் அஜாக்கிரதையால் ஒரு மாணவனின் உயிர் போக போகிறது ... 
திருச்சி அருகேயுள்ள கிராமத்த சேர்ந்த மணி என்ற ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த மாணவர் சென்னையில் நண்பர்களுடன் தங்கி தரமணியில் உள்ள அரசாங்க பாலிடெக்னிகில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் அவர் வீடு வீடாக பால் பாக்கெட் கொடுக்கும் தொழிலை பகுதி நேரமாக செய்து வந்தார் அதற்கு சம்பளமாக கிடைக்கும் 4000 ரூபாயில் தனது படிப்பு செலவுகளை கவனித்து கொண்டு ஊரில் இரண்டு தங்கைகளையும் படிக்க வைத்து வருகிறார் ..அவர் நேற்று அதிகாலை பால் பாக்கெட்களை எடுத்து செல்லும்போது உரக்க கலக்கத்தில் அதி வேகமாக வந்த போலீஸ் ரோந்து வாகனம் அவர் மீது மோதியதில் ஒரு கால் துண்டாகி விட்டது உயிருக்கு ஆபத்தான நிலையில் உயிர் காக்க நண்பர்களின் உதவியால் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது முதல் தவணையாக 50 ஆயிரம் செலுத்தபட்டும் இன்று மேலும் இரண்டு லட்சம் கட்டுங்கள் இல்லையேல் சிகிச்சையை நிறுத்துவோம் என மருத்துவமனை நிர்வாகம் கூறி விட்டது அரசாங்க மருத்துவமனைற்கு கூட்டி கொண்டு செல்கிறோம் என கூறியும் மருத்துவமனை நிர்வாகம் பணம் கட்டிவிட்டு அழைத்து செல்லுங்கள் என கூறி வருகின்றனர் ..அவரது பெற்றோர்களோ கல் உடைக்கும் கூலி தொழிலாளிகள் அவர்களால் அவ்வளவு பணம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர் ..மேற் சிகிச்சையும் நிறுத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் காவல் துறையும் எந்த உதவியும் செய்யவில்லை ..தமிழக முதல்வரால் மட்டுமே இந்த ஏழை மாணவனின் உயிர் காக்க இயலும் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த பதிவு ..என்னால் இயன்ற அளவு நிதி [20000] உதவி அளித்து விட்டேன் ..யாராவது முதல்வரின் கவனத்திற்கு செய்தியை எடுத்து சென்று ஏழை மாணவனின் உயிர் காக்க உதவுங்கள் தொடர்பு எண்-7401137366
சிறந்த கால்பந்து வீரர் விருது பட்டியலில் மெஸ்சி,ரொனால்டோ ,நெய்மார் 
சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில் நட்சத்திர வீரர்கள் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கிறிஸ்டியனோ ரொனால்டோ (போர்ச்சுல்), நெய்மார் (பிரேசில்) உள்பட 23 வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். விருது விவரம் ஜனவரி 13-ந்தேதி அறிவிக்கப்படும்.
6-வது ஒரு நாள் கிரிக்கெட்: பெய்லி- வாட்சன் சதத்தால் ஆஸி. 350 ரன் குவிப்பு
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 6-வது ஒரு நாள் போட்டி இன்று மதியம் நாக்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முள்ளிவாய்க்கால் துன்பியல் நிகழ்வின்பின் நான்காண்டுகள் - புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றிணைகிறார்களா?/தமிழ் கார்டியன் 

சிறிலங்காவில் தொடரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிக்க வேண்டும் எனக் கோருவதுடன் சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தம் கொடுப்பதே தற்போது புலம்பெயர் தமிழ் சமூகத்தின் முக்கிய திட்டமாக காணப்படுகிறது.
பொதுநலவாய மாநாடு ; தீவிர ஆலோசனையில் மன்மோகன் 
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து அரசியல் ஆலோசர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங்  தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
சுயாட்சி மூல­மான தீர்­வுக்கு இந்­தியா உதவ வேண்டும்

இந்திய அரசுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், அதேபோன்று சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளும் இலங்கையினால் நிறைவேற்றப்படவில்லை என்ற கருத்து பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகக் காணப்படுகிறது. இந்தநிலையில் இந்தியா இதுபற்றி கவனம் செலுத்த வேண்டும்.
இளவரசர் சார்ள்ஸின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு லண்டனில் வரவேற்பு நிகழ்வு
பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி கமிலா பாக்கர் ஆகியோரின் இலங்கை மற்றும் இந்திய விஜயத்தை முன்னிட்டு அவர்களுக்கு லண்டனில் வாழ்த்து வரவேற்பு நிகழ்வொன்று ஏற்படு செய்யப்பட்டிருந்தது.
கொமன்வெல்த் மாநாட்டை பகிஸ்கரிக்கக் கோரி சேலத்தில் தீப்பந்தத் தாக்குதல்.B B C 
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி இன்று புதன் அதிகாலை சேலத்தில் வருமான வரித் துறை அலுவலகத்திற்குள் சிலர் தீப்பந்தத்தை வீசி எறிந்தனர்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.


வடக்கு மக்களின் வாழ்வாதாரத்திற்கு தென் கொரியா உதவும்: விக்னேஸ்வரனிடம் தென் கொரியத் தூதுவர் உறுதி
இலங்கைக்கான தென் கொரியத் தூதுவர் ஜோன் மூன் சோய் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்ததுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.
வலி. வடக்கில் வீடுகள் இடிக்கப்பட்டமை உள்நாட்டு பிரச்சினை! முதலமைச்சருடனான சந்திப்பின் பின் அமெரிக்க தூதுவர்.
வலி. வடக்கு விவகாரம் உள்நாட்டு பிரச்சினை என்பதால் கருத்து கூற முடியாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்தார்.

பாலியல் புகார் கொடுத்ததால் ஆசிரியை உயிரோடு எரிப்பு:குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என முதல்வர் உறுதி
ஒடிசா மாநிலம் ராயகாடா மாவட்டம் காசிபூர் அரசு ஆரம்ப பள்ளியில் பணிபுரியும் 27 வயது ஆசிரியையிடம் கல்வித்துறை ஆய்வாளர் தந்தசேனா தவறாக நடந்துள்ளார். 
ஒரே மேடையில் மன்மோகன் சிங், நரேந்திர மோடி பங்கேற்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் படேல் அருங்காட்சியம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஒரே மேடையில் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல் அமைச்சருமான நரேந்திர மோடியும் பங்கேற்றனர். 
இந்த விழாவில் பேசிய மோடி, படேலை பற்றியும் அவரது கொள்கைகளை
ஜாமீனில் வெளியே வந்த ரவுடி கழுத்தறுத்துக் கொலை: முதல்வர் வீட்டின் அருகே கொலை நடந்ததால் பரபரப்பு
புதுச்சேரியில் முதல் அமைச்சர் ரங்கசாமியின் வீட்டின் அருகில் ரவுடி ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை: தொப்புள் கொடியுடன் போட்டு விட்டுச் சென்றது யார்?
அருப்புக்கோட்டை சாலியர் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு யாரோ இந்த குழந்தையை
ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு நவ.21க்கு ஒத்திவைப்பு: பெங்களூரு சிறப்பு கோர்ட்
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 30.10.2013 புதன்கிழமை ஆஜராக வேண்டும் என்று சிறப்பு
10வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம்: புதிய அமைச்சராக விஜயபாஸ்கர் பதவியேற்கிறார்
 


கடந்த இரண்டு ஆண்டுகளில் 10வது முறையாக தமிழக அமைச்சரவையை மாற்றம் செய்துள்ளார் முதல் அமைச்சர் ஜெயலலிதா,

ஜெ. வழக்கிற்கு புதிய நீதிபதி!
ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வரும் பெங்களூரு சிறப்பு கோர்ட் நீதிபதி முடிகவுடர் மாற்றப்பட்டார். புதிய நீதிபதியாக மைக்கேல் டிக்குன்னா நியமிக்கப்பட்டுள்ளார் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 கோத்தாவின் கருத்து நகைப்பிற்குரியது; சுரேஷ் பிரேமச்சந்திரன் 
பொலிஸ் அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளர் தனது கையில் வைத்துக்கொண்டு வட மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பொறுப்பாகும்
பந்து தலையில் தாக்கியதால் தென்னாபிரிக்க உள்ளூர் கிரிக்கெட் வீரர் டெரின் ரண்டால் களத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் ஜோகன்ஸ்பேர்க் நகரில்ல நேற்று முன்தினம் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
யாழ். ஊடகவியலாளர்கள் ஐவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு 
யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூர் ஊடகவியலாளர்களில் ஐவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பேரெழுச்சியுடன் திரண்ட கனடியத் தமிழர்கள்: வரலாறாக படையெடுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள்

கனடா அரசு கொமன்வெல்த் நாடுகள் மாநாட்டை புறக்கணித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஒட்டாவா நாடாளுமன்ற முன்றலில் கனடியத் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் குளிரையும் பொருட்படுத்தாது இன்று பேரெழுச்சியுடன் அணிதிரண்டனர்.


தம்புள்ள பத்திரகாளியம்மன் கோயில் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது! மக்கள் கவலைBBC
மாத்தளை மாவட்டம் தம்புள்ள நகர பிரதேசத்திலுள்ள மகா பத்திரகாளியம்மன் ஆலயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடிக்கப்பட்டு முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அங்கு வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை வாபஸ் பெற முடியாது: ராஜபக்ச திட்டவட்டம்
இலங்கையில் உச்சகட்ட போர் நடந்து முடிவடைந்த நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் வற்புறுத்தி வருகின்றனர்.

29 அக்., 2013

மனைவிகளின் பிரிவை தாங்க முடியாத இலங்கை தமிழ் அகதி ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்டவர் இரண்டு பெண்களை மண முடித்திருந்தவர் என்றும் பொலிஸார் கூறினர்.
கரூர் மாவட்டம் குளித்தலை இரும்பூதிப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த
தமிழர்களின் பின்னால் நிற்பது இந்தியாவின் கடமை - சல்மான் குர்ஷித்

வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பின்னாலேயே இந்தியா நிற்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 
புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயன்ற கனேடியத் தமிழர் சுரேசுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை

விடுதலைப் புலிகளுக்கு ஆயுத தளபாடங்களை வாங்க உதவியதாக, குற்றம்சாட்டப்பட்ட கனேடியத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராஜாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. 
கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் நடாத்திய பூவரசம் பொழுது 2013 கடந்த( 26.10.2013) சனியன்று வெகு சிறப்பாக நிகழ்வுற்றது (113 படங்கள்)

கட்டுவனில் இரவிரவாக அரங்கேறும் காட்சி நல்லிணக்கத்துக்கு கறுப்புப் புள்ளி குத்தவா?
நீங்கள் எதனைச் சொன்னாலும், நாம் முன்வைத்த காலைப் பின்வைக்கும் பிரகிருதிகள் அல்லர். கொழும்பு அரசு சொன்னதைச் செய்வோம். இதனை உங்கள் மனதில், நெஞ்சில் பதித்துக்கொள்ளுங்கள்
இராணுவத்தின் அட்டகாசத்தால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவாய்ப்பில்லை;என்கிறார் சரா எம்.பி 
இராணுவத்தினர் தொடர்ந்தும் அடாவடியில் ஈடுபட்டு வருவது நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  ஈ.சரவணபவன்  தெரிவித்தார்.
10 வருடங்களாக பாடாமல் இருந்த எஸ்.ஜானகி பாடுகிறார்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளவர் பாடகி எஸ்.ஜானகி. 17 மொழிகளில் பாடிய ஒரேயொரு பாடகி


சாப்பாட்டிற்கு போடுவது வாழை இலை - சாப்பிட்ட பிறகு போடுவது வெற்றிலை : சிற்றுந்து இலை சர்ச்சைக்கு அரசின் அடேங்கப்பா விளக்கம்
 


சென்னை மாநகரத்தில் இயக்கப்பட்டுள்ள சிற்றுந்துகளில் உள்ள இலைகள் பசுமையின் அடையாளமே தவிர அதிமுக அரசின் கட்சி சின்னம் அல்ல என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் அதிமுகவில் இணைந்தார்
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை இன்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன்; அந்தமான் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர்
சென்னை செண்ட்ரல் ஆஸ்பத்திரியில் அம்மா உணவகத்தில்5 ரூபாய்க்கு 3 சப்பாத்தி 2 ரூபாய்க்கு டீ 
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் விரைவில் திறக்கப்படுகிறது.   6000 சதுர அடியில் அனைத்து வசதிகளுடன் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலையில்
பாத்திமாபாபு, நிர்மலாபெரிசாமி அதிமுகவில் இணைந்தனர்

 


அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை இன்று நிகழ்ச்சி தொகுப்பாளரும், செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி ஆகியோர் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

ஸ்டெர்லைட் வழக்கு : வைகோ மேல்முறையீடு-  சுப்ரீம் கோர்ட் முடிவு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து போராடி வருகிறார். அவர் தொடுத்த ரிட் மனு மீது, விசாரணை நடத்திய சென்னை ஐகோர்ட், 2010 செப்டம்பர் 28-ல்

28 அக்., 2013

அனந்தி சசிதரனும் அமெரிக்கா செல்லவுள்ளார்!
வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எதிர்வரும் 31ம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

லண்டன் மக்களுக்கு அவசர அறிவித்தல் -லண்டன் தொடரூந்து சேவைகள் முடக்கம்-மரம் முறிந்து ஆண் .பெண் பலி

லண்டனில் உள்ள மக்கள் வெளியில் போக்குவரத்து செய்ய முன்னர் போக்குவரத்து இணையதளத்தினை பார்வை இட்டு செல்லும் படி கூறபட்டுள்ளது

பிரிட்டனில் புயல் கோரம் 140 விமானங்கள் இரத்து 220.000 மக்கள் மின்சாரம் இன்றி அவதி 146 வெள்ளபேருக்கு அபாயம் போக்குவரத்து தடை photo in

கடந்த இரவு ஒன்பது மணியில் இருந்து  பிரிட்டனில் நூற்றி அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசிவருவதால் இதுவரை பிரிட்டன்

கொழும்பு மாநாட்டிற்கு இந்தியா செல்வதா தமிழ்நாட்டில் விவசாயி தீக்குளிப்பு!கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகவுண்டம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயபால் (43) இன்று காலை திடீரென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.கொழும்பில்

வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கு மட்டும் 852 கோடி! 14 அமைச்சுக்களுக்கு 624 கோடி ஒதுக்கீடு
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 13 நாடுகளே கொழும்பு மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரை உறுதிப்படுத்தியுள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண சபை கன்னி அமர்வில் முதலமைச்சரின் உரை குறித்து ஆளுநர் சந்திரசிறி மறுப்பு
வட மாகாண சபையின் முதலாவது அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது தான் அதில் கலந்து கொண்டதாகவும், முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் உரையை செவிமடுத்ததாகவும் சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்று
பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக தமிழ்க் கூட்டமைப்பு முடிவு! அரசாங்கம் கடும் அதிருப்தி
பொதுநலவாய உச்சி மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவிற்கு அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளது.
பழிக்கு பழி வாங்கவே மோடி கூட்டத்தில் குண்டுவைத்தோம் : பிடிபட்ட தீவிரவாதிகள் வாக்குமூலம்
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட பாட்னா பொதுக் கூட்டத்தில் அடுத்தடுத்த 6 இடங்களில் குண்டு வெடித்தது. முன்னதாக பாட்னா ரெயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்தன.

தேனிலவுக்காக உதகை வந்த இலங்கை இளைஞர் நீர்வீழ்ச்சி சுழலில் சிக்கி பலி
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் ரீகன் வயது-29, இவர், ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஜான்சி எனபவருடன் கடந்த புதன்கிழமை சென்னையில் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக புதுமணத் தம்பதியினர்,
தயாளு அம்மாளிடம் விசாரணை - சாட்சியம் பதிவு
சென்னை எழும்பூர் பெரு நகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி கோபாலன், கலைஞரின் கோபால புரம் இல்லத்தில் காலை 10 மணியளவில் தயாளு அம்மாளிடம் 2ஜி வழக்கில் விசாரணை மேற்கொண்டு சாட்சியத்தைப் பதிவு செய்வார்.
சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை சட்டப்பேரவை கூடியதும், விவாதத்தின் போது திமுக உறுப்பினர் எ.வ. வேலு குறித்து, அமைச்சர் முனுசாமி கருத்துக் கூறினார்.
2வது திருமண விவகாரம் : நடிகை சரிதா புகாருக்கு நடிகர் முகேஷ் பதில்
நடிகர் முகேஷ் கேரளாவை சேர்ந்த நடனக்கலைஞர் தேவிகாவை கடந்த வாரம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கொச்சியில் உள்ள ரிஜிஸ்டர் அலுவலகத்தில் அவர்கள் பதிவு திருமணம்

கோவா கடற்கரையில் ராணாவுடன் சுற்றிய திரிஷா :
இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பு
 

நடிகை திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் கோவா கடற்கரையில் கைகோர்த்து சுற்றிய படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

27 அக்., 2013

 நடிகைக்கு உதடு முத்தம் கொடுத்து நடிக்கக்கூடாது: நடிகருக்கு மனைவி உத்தரவு
 இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தற்போது ‘பென்சில்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். மணி நாகராஜ் இயக்குகிறார். 
சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண், டாக்டர்களின் தவறான அணுகுமுறையால் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அடுத்த சேலையூர் அக்ரகாரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மோகன். தனியார் கார் நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஹரினி நாச்சியார் (வயது 23).
நாம் கூட்டுப் பங்காளிகளே தவிர, குத்தகைக்காரர்களல்ல - முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்

கைதடியில் நேற்று நடந்த வடக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரையின் முழுவடிவம்
அமைதியாக ஒதுங்கிய வாழ்க்கை வாழ்ந்து வந்த என்னை சிறிய கால இடைவெளிக்குள் ஒரு நாடறிந்த உலகறிந்த அரசியல்வாதியாக மாற்றிய என் அன்பார்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அபிமானிகளுக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும். 
கொமன்வெல்த் மாநாடு குறித்து கூட்டமைப்புத் தலைவர்கள் ஆராய்வு

வடக்கு மாகாணசபை அதிகாரபூர்வமாகச் செயற்படத் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் கொமன்வெல்த் மாநாடு தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். 
கிட்டுப் பூங்காவில் இராணுவ முகாம் அமைக்க இடமளிக்க மாட்டோம்!- கஜதீபன
யாழ். நல்லூரில் உள்ள கிட்டுப் பூங்காவில் இராணுவ முகாம் அமைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என வட மாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியும் அறிவு வளர்ச்சியும் முன்பள்ளி மாணவர்களிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்: வடமாகாண உறுப்பினர் 
எந்தவொரு அபிவிருத்தி என்றாலும் அறிவு வளர்ச்சி என்றாலும் அது அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.
ஓட்டுப்பதிவை அதிகரிக்க பிரபல நடிகை மற்றும் கிரிக்கெட் வீரரை களமிறக்கும் தேர்தல் ஆணையம் 
இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் ஓட்டுப்போடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் விளம்பரங்களை தயாரித்து ஊடகங்கள் மூலம் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 
ஆந்திரா, ஒடிசாவில் 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன 
ஆந்திரா, ஒடிசாவில் 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.  

26 அக்., 2013

உலகில் பாடசாலை செல்லாத 770 இலட்சம் சிறுவர்கள்
உலகம் முழுவதிலும் சுமார் 77 மில்லியன் சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை. மேலும் 66 மில்லியன் சிறுவர்கள் பசியுடனேயே பாடசாலை செல்கின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன.
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறவேண்டும்: சென்னையில் சுதர்சன நாச்சியப்பன் பேட்டி
    இலங்கையில் உள்ள தமிழர்களின் பொருளாதாரம் மேம்பட அங்கு காமன்வெல்த் மாநாடு நடைபெற வேண்டும் என்று மத்திய தொழில்துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். 
தேசிய பாதுகாப்பு குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் விக்னேஸ்வரனுக்கு கிடையாது! கோத்தபாய
தேசிய பாதுகாப்பு குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டில் 16 நாடுகளின் தலைவர்களே பங்கேற்பு
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரை 13 நாடுகளின் தலைவர்களே உத்தியோகபூர்வமாக உறுதியளித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கேட்கும் தமிழ்த் தொழிலாளர்கள்- வீரகேசரி 
எட்டு வருடங்களாக காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். பட்டப்பகலில் நடந்து செல்வதற்குக் கூட பயமாக இருக்கிறது. எந்தக் குற்றமும் செய்யாமல் திறந்த வெளியில் சிறைபடுத்தப்பட்டது போலத்தான் எங்களது வாழ்க்கை - இது களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை பகுதியில் வசிக்கும் மக்களின் சோகக்குரல்.
ஹொரணை பெருந்தோட்டக் கம்பனியின் ஹில்ஸ்ட்றீம் தோட்டத்தின் ஒரு பிரிவே அரம்பஹேன. அங்குள்ள மக்கள் காட்டுக்குள்



          எம்.பி. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் இப்போதே பா.ம.க.வைப் போல் ஜரூராகக் களமிறங்கிவிட்டது அ.தி.மு.க. ஒவ்வொரு மா.செ.வுக்கும் மூன்று வாரங்களுக்கு முன்பு கடிதம் எழுதிய கட்சித் தலைமை, ’உங்கள் மாவட்டத்தில் இருக்கும் நாடாளு மன்றத் தொகுதிகளுக்கு, யார் யாரை வேட் பாளராக நிறுத்தலாம் என்ற பரிந்துரைப் பட்டியலை 15 நாட்களுக்குள் அனுப்பிவையுங் கள் என குறிப்பிட்டிருந்தது. இதன்படி ஒவ்வொரு அ.தி.மு.க., மா.செ.க்களும் தங்களுக்குப் பிடித்த மாதிரி ஒரு பட்டியலை தலைமைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மா.செ.க்கள் அனுப்பி வைத்திருக்கும் அந்த சீக்ரெட் பரிந்துரைப் பட்டியல் இதோ...
சனத் ஜயசூரியவிடமிருந்து மனைவி விவாகரத்து கோரியுள்ளார்!
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரியவிடமிருந்து விவகாரத்து பெற்றுத் தருமாறு அவரது மனைவி நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இராணுவமானது வட மாகாணத்தில் உடனேயே அதன் முகாம்களுக்கு முடக்கப்பட வேண்டும். மாகாணத்தின் வயது எய்திய குடிமக்கள் ஐவருக்கு ஒருவர் இராணுவ போர் வீரராக வலம் வரும்போது முறையான படைத்துறை சாராத குடிமக்கள் சார்ந்த நிர்வாகத்தை நாம் முன்நடத்த முடியாது. எமது மக்கள் எமது கட்சிக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியதில்

25 அக்., 2013

மாகாண சபையிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரே துறை கூட்டுறவுத் துறையே ;நா.சேனாதிராசா 
இலங்கையில் முதலாவது சி.க.கூ சங்கம் யாழ்ப்பாணத்திலேயே அமைக்கப்பட்டது அதன் கிளைகளாகவே ஏனைய சங்கங்கள் அமைக்கப்பட்டன. மேலும் மாகாண சபைக்கு முழுமையாக பாரங்கொடுக்கப்பட்டுள்ளது கூட்டுறவுத் துறை மட்டுமே எனவும்   வவுனியா
தீர்வைப் பெறக்கூடிய காலத்தின் அத்திபாரமே மாகாண சபையின் வெற்றி; வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 
news
சுயாதீனமாகச் சிந்தித்து எமக்கான தீர்வைப் பெறக்கூடிய காலத்தின் அத்திபாரம் தான் மாகாண சபையின் வெற்றி - இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண சபை சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்.
 
வவுனியாவில் நேற்று முன்தினம் சுகாதார சேவைகள் பணிமனைக்குச் சென்று அங்குள்ள உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
தொடர்ந்து அவர் அங்கு தெரிவித்ததாவது:
 
போர், இயற்கை அழிவு காரணமாக எமது மக்கள் பல துன்பங்களை எதிர்கொண்டனர். அதன்போது அவர்களுக்கு உதவும் பொருட்டு நான் குறைந்த
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க போவதாக ஆப்ரிக்க நாடுகள் அறிவித்துள்ளது.இன வெறியின் பாதிப்பையும் அதன் வலியவும் அதிகமாக அனுபவித்த நாடுகள் இந்த ஆப்பிரிக்க நாடுகள்.அதனால்தான் இன அழிப்பு நடத்தப்பட்ட இலங்கையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என்று தாங்களே முன் வந்து அறிவித்துள்ளன.
தமிழர்களின் வலியவும் வேதனைகளையும் புரிந்துகொள்வதற்கு சர்வேதேச அரங்கில் பலநாடுகள் இருப்பது நமக்கு ஒரு நம்பிக்கையை தருகிறது...அந்த நாடுகளுக்கு ஒவ்வொரு தமிழனும் கடமைப்பட்டுள்ளோம்.
Red Bull குளிர்பானத்திற்கு புதிய வரி விதிக்க முடிவு

பிரான்சில் ரெட் புல்(Red Bull) குளிர்பானத்திற்கு புதிய வரியை விதிக்க நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.
பிரான்சில் ஏராளமான குடிபானங்களுக்கு பொதுமக்க
வடக்கு மாகாணசபையினது முதலாவது அமர்வில் தனது முதல் உரையில் அனைவரையும் மக்களிற்காக ஒன்றிணைய அழைப்பு விடுத்து அவர் தனது உரையில் ...

வணக்கம். நான் அனந்தி சசிதரன்-எழிலன். 


             சீமென் கார்டு ஓகியா.. இந்திய கடல் எல்லைக்குள் துப்பாக்கி, தோட்டாக் களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பல். மாலுமிகள் 10 பேர் உட்பட 35 பேர் பிடி பட்டிருக்கிறார்கள்.. இந்தக் கப்பலுக்கு கள்ளத்தனமாக டீசல் சப்ளை செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த  5 பேர் கைதாகியிருக்கின்றனர்.


          ""ஜெ.வின் அரசியல்  நண்பரான நரேந்திர மோடி பிரதமர்  வேட்பாளரா அறிவிக்கப்பட்டபிறகு இரண்டாவது முறையா தமிழகத்துக்கு வந்துட்டுப் போயிருக்காரே. .. கூட்டணி முயற்சிகள் பற்றி ஸ்டெப் எதுவும் எடுக்கலையா?''


              சிகலாவின் கதை எங்குமே அரங்கேறக் கூடாத கண்ணீர்க்கதை.

சசிகலாவுக்கு வயது 19. முதுகுளத்தூர் சோனைமீனாள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக்கொண்டிருந்தாள். அதே வகுப்பில் படித்த கோட்டைச்சாமிக்கும் சசிகலாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. 



          ""ஹலோ தலைவரே... எம்.பி. தேர்தலில் தமிழகத்தில் யார் எந்தக் கட்சியோடு கூட்டணி சேருவாங்கன்னு யாருக்கும் தெரியாத நிலைதான் தொடருது.''

""பெரிய கட்சிகளான அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் மூடுமந்திரமா இருக்கிறதாலதானே இந்த நிலைமை. அப்படியிருந்தும் வரும் 30-ந் தேதி டெல்லியிலே கம்யூனிஸ்ட் கட்சிகள்
இந்தியா தனிமைப்படுத்தப்படுமா? : இலங்கைத் தூதருக்கு கண்டனங்கள்!
கொமன்வெல்த் அமைப்பில் இருந்து  இலங்கையை நீக்கி வைக்க வேண்டும் என்று நேற்று தமிழக சட்டைசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கை தூதர் பிரகாஷ் கரரியவசம், கொமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும் என்று எச்சரித்துள்ளமைக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
புதிய கட்டடம் புதிய முதலமைச்சரால் திறந்து வைப்பு
யாழ்ப்பாணம் கைதடியில் புதிதாக அமைக்கப்பட்ட வடக்கு மாகாண சபைக்கான கட்டடம் இன்று காலை 8 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.வடக்கு மாகாண சபைக்கென 450 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் புதிய கட்டடம் இன்றைய தினம் வைபவ ரீதியில் வடமாகாண
வட மாகாண சபையின் தலைவராக சீ.வீ.கே.சிவஞானம் தெரிவு! அடுத்த அமர்வு நவம்பர் 11ல்..
வட மாகாண சபையின் தலைவராக சீ.வீ.கே.சிவஞானம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு வட மாகாண முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை யாழ்.கைதடியில் மாகாண சபையின் கன்ன அமர்வு ஆரம்பமானது.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மாகாண மற்றும் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
கந்தசாமி சிவஞானம் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்துக்கு ஐநா உதவும்!- சுபினாய் நன்டி
இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்துக்கு உதவ தாம் எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது . ஐக்கிய நாடுகளின் கொழும்புக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினாய் நன்டி இந்த கருத்தை நேற்று மஹரகமவில் இடம்பெற்ற நிகழ்வின் போது வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான தூக்கு மேடை நிர்மாணிக்கப்படும் சத்தம் கேட்கிறது: தயான் ஜயதிலக்க
நாட்டின் தலைவருக்கும், முப்படையினருக்கும், இறையாண்மைக்கும், சுயாதீனத்திற்கும் எதிராக தூக்கு மேடை நிர்மாணிக்கும் சத்தம் கேட்பதாக ராஜதந்திரியும் ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர பிரதிநிதியுமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!- 7 பெண்கள் கைது
கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த மேல் மாகாண மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் அங்கிருந்த 7 பெண்களை கைதுசெய்துள்ளனர்.
கொமன்வெல்த் மாநாடு! தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை உதாசீனப்படுத்தக் கூடாது!- டி.ராஜா - சட்டசபை தீர்மானத்திற்கு ராமதாஸ் பாராட்டு தெரிவிப்பு
காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு உதாசீனப்படுத்தக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. 
பொலிஸ் அதிகாரத்தை வழங்குங்கள்! முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவார்!- தமிழ் தேசிய கூட்டமைப்பு
பொலிஸ் அதி­கா­ரத்தை தம்வசம் வைத்துக் கொண்டு வடக்கில் சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­ட­ வேண்­டி­யது முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வ­ரனின் கட­மை­யாகும் எனக் கூறு­வது எவ்­வி­தத்தில் நியா­ய­மாகும். எனவே பொலிஸ் அதி­கா­ரத்தை எழுத்து மூலம் முத­ல­மைச்­ச­ருக்கு வழங்க வேண்­டு­ம் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தெரிவித்துள்ளது.
நாவற்குழி காணிப்பிரச்சினை தொடர்பில் நீதிமன்றத்தை நாடப்போவதாக வடக்கு முதலமைச்சர் அறிவிப்பு! அரசாங்கக் காணிகளை வழங்குவது தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம்
யாழ்ப்பாணம் நாவற்குழியில் இராணுவம் சிங்களவர்களுக்கு காணிகளை பகிரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 
பிபிசி நிருபர் யாழ் சென்று எடுத்த அடுத்த ஆவணப்படம் நேற்று மாலை வெளியாகியது!

போர் முடிவடைந்துவிட்டது. சமாதானம் வந்துவிட்டதாக இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் அங்கே உண்மையாக நடப்பது என்ன ?
இலங்கையின் இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து ஒரு சர்வதேச

எழிலன் பற்றிய வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடக்கும்

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் இராணுவத்திடம் சரணடைந்த பின், அவர் பற்றிய தகவல்கள் இல்லை என்று அவரது மனைவி முறையிட்டுள்ளார்

24 அக்., 2013



சட்டசபைத் தீர்மானம் மனநிறைவைத் தரவில்லை;
ஏமாற்றம் அளிக்கிறது - கவலை தருகிறது : வைகோ விரக்தி
 

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஜெ., கொண்டு வந்த தீர்மானம் :
இலங்கை தூதர் எச்சரிக்கை

இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அந்த நாட்டை காமன்வெல்த் அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
 
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் 24.10.2013 வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராணுவ மேலாதிக்கத்தில் துப்பாக்கி முனைகளின் கீழ் நடத்தப்படுவது பாலியல் வல்லுறவேயன்றி பாலியல் தொழில்ல

அனந்தி சசிதரன் (எழிலன்)
ராணுவ மேலாதிக்கத்தில் துப்பாக்கி முனைகளின் கீழ் நடத்தப்படுவது பாலியல் வல்லுறவேயன்றி  பாலியல் தொழில்ல
முள்ளிவாய்க்கால் பேரவலத்தினிலிருந்து ஒருவாறு மீண்டெழுந்து கொண்டிருக்கும், வட-கிழக்கு பெண் சமூகத்தினை மீண்டும் மீண்டும் சகதிக்குள் இழுத்து வீழத்த கொழும்பு ஆட்சியாளர்களும்,
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில்

23 அக்., 2013

சுவிட்சர்லாந்து நலிவடைந்தோர் உதவிச் சங்கத்தின் ஆண்டுவிழா

தமிழர் தாயகத்தில் வாழும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சுவிட்சர்லாந்து நலிவடைந்தோர் உதவிச் சங்கத்தின் முதலாவது ஆண்டுவிழா அண்மையில் பேர்ண்- ஒஸ்ரர்முண்டிகன் நகரில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் க.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினை பேர்ண் ஞானலி
ஏற்காடு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.சரோஜா பற்றிய விபரங்கள் 
    சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சரோஜா. இவருக்கு வயது 55. காலம் சென்ற ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் மனைவியாவார்.
இதே தொகுதிக்கு உட்பட்ட புளுதிக்குட்டை என்ற ஊரை சேர்ந்த
30 வருடமாக சம்பாதித்த நற்பெயரெல்லாம் ஜெயலலிதா வழக்கு விசாரணையினால் பறி போனது: நீதிபதி பாலகிருஷ்ணா
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 
கொமன்வெல்த் மாநாடு ஏன் இலங்கையில் நடாத்த வேண்டும்? - சனல் 4
இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டுக்கு இன்னமும் ஒரு மாதத்திற்கு குறைவான நாட்களே இருக்கும் இந்நிலையில், அம்மாநாட்டை ஏன் இலங்கையில் நடாத்தவேண்டும் என சனல் 4 கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கைக்கு இந்திய பிரதமர் செல்லக்கூடாது! மன்னிப்பு சபையின் பிரசாரத்துக்கு இந்தியாவில் 35 ஆயிரம் பேர் ஆதரவு
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று கோரி சர்வதேச மன்னிப்பு சபை இந்தியாவி;ல் மேற்கொண்ட பிரசாரத்துக்கு இதுவரை 35 ஆயிரம் பொதுமக்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
தமிழக சட்டசபையில் கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க கோரி தீர்மானம்
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், இக்கூட்டத் தொடரில் கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதை பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது!
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதை இன்று செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைக்கப்பட்டது.

22 அக்., 2013

இராஜினாமா செய்யுமாறு கல்முனை மேயருக்கு பணிப்பு

மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கைவிடுத்துள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள்
அரசுக்கு எதிரானவர்களை படுகொலை செய்த குழுவினர் பற்றிய விபரங்கள்! அம்பலப்படுத்தும் சிங்கள இணையம்!
இலங்கையில்  ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் அவரது அரசுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பான விபரங்கள் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளதாகச் சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது: சம்பந்தர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று (அக்டோபர் 22,2013) செவ்வாய்க்கிழமை காலை தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களை சென்னையில் சந்தித்து
வடக்கு – கிழக்கு இணைப்புக்கு பச்சைக்கொடி
‘வடக்கு – கிழக்கு இணைப்பு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் குறித்தும் சாதகமாகப் பரிசீலிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துணர்வுடன் செயற்பட முன்வர வேண்டும்.”
தமிழர்களுக்கு ராஜபக்ச அரசு ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு/ விகடன் 

ஈழத் தமிழர்களுக்காக இலங்கை அரசு ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் குற்றம்சாட்டினார்
வடமராட்சி கிழக்கில் ஈபிடிபியினால் மேற்கொள்ளப்படும் மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படும்!- பொ.ஐங்கரநேசன்
வடமாராட்சி கிழக்கில் ஈ.பி.டி.பி யின் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்படும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்ததுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வடமாகாண விவசாய, கால்நடைகள் மற்றும் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்‌ஷாவின் தந்தை மோசடியில் ஈடுபட்டு கைது!
பிரபல சிங்கள நடிகையும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்‌ஷா சுவர்ணமாலியின் தந்தை நிதி மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையமொன்றுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாக ஏமாற்றி பணம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பீரிசிற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்

பிரித்தானியாவில் அமைச்சர் ஜீ.எல். பீரிசிற்கு எதிராக இன்று மாலை WC1E 7HU, Malet Street  என்னும் முகவரியில் அமைந்துள்ள Senate House  முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று ஒன்று நடைபெற்றுள்ளது.

ad

ad